Tuesday, December 8, 2009

அழைக்கிறேன், வாருங்கள்...

அழைக்கிறேன், வாருங்கள்...
-----------------------------------

பதிவுலக நண்பர்களே...
வணக்கம்.

சாரு நிவேதிதா சொல்வது போல புத்தக வெளியீட்டு விழா ஒரு கலாச்சார நிகழ்வு. அது ஒரு கொண்டாட்டம். அனுபவ பகிர்வு. (பக்கத்து மாநிலம் கேரளாவை பாருங்கள். ஷகீலாவை பாருங்கள் எ‌ன்றெல்லாம் சொல்ல வரவில்லை.) எழுத்தாளனையோ படைப்பாளியையோ கொண்டாட தேவையில்லை. அட்லீஸ்ட் படைப்புகளை, ந‌ல்ல எழுத்தை கொண்டாடலாம். இவ்வளவு பீடிகை எதற்கு என்றால் டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

வரும் டிசம்பர் 11 அன்று அகநாழிகை பதிப்பகம் சார்பாக புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது



அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை
மாலை 5.30 மணி
இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை, கே.கே.நகர் (மேற்கு),
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78.



தொடர்புக்கு:-

பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
வலைத்தளம் : http://www.aganazhigai.com
aganazhigai@gmail.com


வாருங்கள். எழுத்தை கொண்டாடுவோம்.

Monday, December 7, 2009

நான்கு கவிதைகள்

சமாதானப் புறா
--------------
சமாதானப் புறாக்களை
ஏதாவதொரு மாநாட்டில்
பறக்கவிடுவதை
அடிக்கடி நீங்கள்
தொலைக்காட்சியிலோ நேரிலோ
பார்த்திருக்கலாம்
அதற்கப்புறம்
அந்த புறாக்கள்
எங்கு செல்கின்றன
என்னவாகின்றன
தெரிந்தால் சொல்லுங்களேன்



உப்பிட்டவரை
————————————

காலை தெருமுனையில்
பார்த்தேன் அவனை
உடம்பெல்லாம் உப்பு
தடவியபடியே இறங்கிக்கொண்டிருந்தான்
முகத்தை கவனிக்க முடியவில்லை
பாதாள சாக்கடை துர்நாற்றமோ
அலுவலகம் செல்லும் அவசரமோ
சரியாக நினைவில் இல்லை

மூங்கில் குச்சிகளோடு முங்கியவன்
தலைக்குமேல் கைகள் அசைகையில்
ரயில்களுக்கு டாட்டா சொல்லும் குழந்தைகளோ
கற்பூர ஆரத்திக்கு உருகும் பக்தர்களோ
சரியாக சொல்ல தெரியவில்லை


மதியம் 1:12 மணிக்கு
சிவப்பு நிற
டப்பாவை பிரிக்கையில்
முத‌ல் கவளம் ருசிக்கையில்
உப்பு வைக்க மறந்த
மனைவியை சபிக்கையில்
சரியாக வ‌ந்து தொலைத்தான்

அவன்
——————
எப்படி இருப்பான்
எ‌ன்ற கேள்விக்கு
எப்படி இருந்தால்
எனக்கு பிடிக்குமோ
அப்படித்தான் இருப்பான் என்றேன்.
நடுவில்
எப்படி எப்படியோ
மாறிவிட்டது எல்லாம்.
அவன் அப்படியேத்தான் இருக்கிறான்.


நான் அவன் இ‌ல்லை
--------------------

சத்தியமாக
நான் பிடுங்கிக் கொள்ள போவதில்லை
நான் அப்படிப்பட்டவனும் இல்லை
எடுக்கவா தொடுக்கவா
எ‌ன்று கேட்கும் ஆளுமில்லை
இருந்தாலும்
எதிர்ப்படும் இந்த பெண்கள்
எல்லாம் ஏனோ
அடிக்கடி முந்தானையை
சரிசெய்துக் கொள்கிறார்கள்

Saturday, December 5, 2009

உலகக் கவிஞர்கள் - 1

உலகக் கவிஞர்கள்
---------------------------
பிரம்மராஜன் அவர்கள் தொகுத்த சமகால உலகக் கவிதை (உயிர்மைப் பதிப்பகம்) படித்து கொஞ்சம் மண்டை காய்ந்து விட்டது. சில கவிஞர்கள் பெயர்களை எல்லாம் உச்சரிக்கையில் பல் சுளுக்கி விட்டது. இவர்களை நெட்டில் தேடி அலைந்தபோது சிலர் முகவரிகள் கிடைத்தது. இங்கு அவற்றை பதிவு செய்கின்றேன்.சில கவிஞர்களின் வலைத்தள முகவரிகள் மட்டும் கிடைக்கவில்லை. யாராவது பகிர்ந்துக்கொண்டால் படிக்க வசதியாக இருக்கும். சில்வியா பிளாத் கவிதைகளை நாகார்ச்சுனன் தளத்தில் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பார்க்கலாம். பாப்லா நெரூடா கவிதைகள் திண்ணை.காமில் கிடைக்கும். பிரம்மராஜன் அவர்களது வலைத்தளத்திலும் படிக்கலாம்...


உலகக் கவிஞர்கள் பட்டியல்
-------------------------
ஐரோப்பா
-----------
1.பெர்டால்ட் ப்ரக்ட் (ஜெர்மனி)
2.குந்தர் கூநர்ட் (ஜெர்மனி)
3.பால் ஸெலான் (ஜெர்மனி)
4.டாமஸ் ட்ரான்ஸ்ரோமர் (ஸ்வீடன்)
5.செஸ்வா மிவோஷ் (போலந்து)
6.ஸ்பிக்நியூ ஹெர்பர்ட் (போலந்து)

போலந்து
-----------
1.ததயூஸ் ரோஸ்விட்ச்ட்
2.அன்னா ஸ்விர்ஸைனிஸ்கா
3.விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
4.இங்க்போர்க் பாக்மன் (ஆஸ்திரியா)

மத்திய ஐரோப்பா
-------------------
1.வாஸ்கோ போப்பா(செர்பியா)
2.மிராஸ்லாவ் ஹோலுப் (செக்கஸ்லோவாகியா)
3.யான் காப்லின்ஸ்கி (எஸ்டோனியா)
4.நினா கேஸியன் (ரொமானியா)
5.மாரின் ஸோரெஸ்க்யூ (ரொமானியா)
6.ஆக்னநெஸ் நெமிஸ் நேகி (ஹங்கேரி) - Ágnes Nemes Nagy
7.டெஸ்ஸோ டேன்டோரி (ஹங்கேரி)
8.நாஸோஸ் வாயெனா‌‌‌ஸ்
9.பெரன்ஸ் யூஹாஸ் (ஹங்கேரி) Ferenc Juhász
10.சேஸரே பவேசே
11.பிரைமோ லெவி (இத்தாலி)
12.பியர் பாவ்லோ பாஸோலினி (இத்தாலி)
13.பாட்ரீஸியா காவல்லி (இத்தாலி)
14.ஃபெர்னான்டா பெசோவா (போர்ச்சுகல்)
15.ஃபிலிப் ஜக்கோட்டே (ஃபிரான்ஸ்)
16.ப்ளெய்ஸ் ஸென்றார்ஸ் (ஸ்விட்ஸர்லாந்து)
17.ஹைன்ரிக் நார்பிராண்ட் (டென்மார்க்)

ரஷ்யா
-------
1.ஓசிப் மெண்டல்ஷ்டாம்
2.மரீனா ஸ்வெட்டயேவா

கனடா
-------
1.மைக்கேல் ஓன்யாட்டே

லத்தீன் அமெரிக்கா
--------------------
1.பாப்லோ நெரூடா (சிலி)
2.ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ)
3.ராபர்ட்டோ யூவாரோஸ்
4.கிளாரிபெல் அலெக்ரியா
5.ஜோஆவோ கேப்ரல் டி மெலோ நெட்டோ
6.தான்சி மோர்யோன்

மத்திய கிழக்கு நாடுகள்
------------------------
1.எஹுதா அமிக்ஹாய் (இஸ்ரேல்)
2.தாஹ்லியா ராவிகோவிச் (இஸ்ரேல்)
3.டேன் பேகிஸ் (இஸ்ரேல்)
4.மொஹமத் தர்வீஷ் (பாலஸ்தீனம்)
5.அடோனிஸ் (லெபனான்)
6.நஸீம் ஹிக்மெத் (துருக்கி)

ஆப்பிரிக்கா
------------
1.பிரேட்டன் பிரேடன்பாஹ் (தென்னாப்பிரிக்கா)
2.ஜெரிமீ க்ரோனின்
3.டென்னிஸ் ப்ரூடாஸ் (தென்னாப்பிரிக்கா)
4.டெர்க் வால்காட் (கரீபியா)
5.கோஃபி அவூனோர் (கானா)

ஆசியா
-------
1.டக்குமுரா கொட்டாரோ (நம்புங்க பெயரே இப்படித்தான்) (Takamura Kotaro) (ஜப்பானிய கவிஞர்)
2.ஏ.கே.ராமானுஜன் (இந்தியா)
3.ஜெயந்த மகாபத்ரா (இந்தியா)
4.ரியூச்சி தமுரா(Ryuichi Tamura ) (ஜப்பான்)
5.ஷன்டாரோ தனிக்காவா
6.சிமாகோ தடா
7.சப்பார்டி ஜோக்கோ தமோனோ (இந்தோனீசியா)
8.ஸோ சோங்-ஜூ (கொரியா)
9.யாங் லியூஹாங் (yang li yu huang) (சீனா)
10.ஷூடிங்
11.நகுயென் சி தியென்(வியட்நாம்)
12.சோங் ஹ்யோன்-ஜோங் (கொரியா)




ஒரு கவிதையை மொழிப்பெயர்ப்பது போல சிரமமான வேலையெதுவுமில்லை. ஒரிஜினா‌‌‌லிட்டி கெடாமல் அதேநேரம் தமிழ் சூழலுக்கும் ஏற்றவாறு கொண்டு வருவதற்குள் உயிர் போகிறது.நஸீம் ஹிக்மத்தின் ஒரு கவிதையை மொழிபெயர்த்தேன்.

நஸீம் ஹிக்மத்
——————————————
The Walnut Tree

my head foaming clouds, sea inside me and out
I am a walnut tree in Gulhane Park
an old walnut, knot by knot, shred by shred
Neither you are aware of this, nor the police

I am a walnut tree in Gulhane Park
My leaves are nimble, nimble like fish in water
My leaves are sheer, sheer like a silk handkerchief
pick, wipe, my rose, the tear from your eyes
My leaves are my hands, I have one hundred thousand
I touch you with one hundred thousand hands, I touch Istanbul
My leaves are my eyes, I look in amazement
I watch you with one hundred thousand eyes, I watch Istanbul
Like one hundred thousand hearts, beat, beat my leaves

I am a walnut tree in Gulhane Park
neither you are aware of this, nor the police


Nazim Hikmet

translated from Turkish by Gun Gencer

வாதாமரம்
—————————

மேகங்களை தூவும் என் தலை, கடல் என்னுள்ளும் வெளியும்
குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
ஒரு முதிர்ந்த மரம், முடிச்சுகளும், வளையங்களுமாய்
நீங்களோ காவல்துறையோ இது அறியாதது

குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
என் இலைகள் விரைந்தசையும், நீரில் விரையும் மீனென
என் இலைகள் தூய்மையானவை, பட்டுக்கைக்குட்டையின் தூய்மையென
பிடுங்கி, துடை, என் ரோஜாவை, உன் விழியில் வழியும் கண்ணீரை
என் இலைகள் என் கரங்கள், நூறாயிரம் கரங்கள் எனக்கு
நூறாயிரம் கரங்களால் தொடுகிறேன் உன்னை, தொடுகிறேன் இஸ்தான்புல்லை
என் இலைகள் என் விழிகள், வியப்போங்க பார்க்கிறேன்
நூறாயிரம் விழிகளால் பார்க்கிறேன், பார்க்கிறேன் இஸ்தான்புல்லை
நூறாயிரம் இதயங்களாய், துடிக்க, துடிக்கிறேன் என் இலைகளை

குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
நீங்களோ காவல்துறையோ இது அறியாதது

(இஸ்தான்புல் - துருக்கியின் பழமையான நகரம்)
நன்றி http://www.cs.rpi.edu/~sibel/poetry/nazim_hikmet.html


டக்குமுரா கொட்டாரா கவிதையொன்ரை மொழிப்பெயர்த்தேன்

Extraordinary Chieko

Chieko sees what cannot be seen,
Hears what cannot be heard.

Chieko goes where no-one else can go,
Does what no-one else can do.

Chieko doesn’t see the physical me,
She yearns for the me behind me.

Chieko has lifted off the burden of pain
And drift into a realm of grace and beauty.

I hear her voice calling over and over to me
But Chieko no longer has a ticket to the human world.

அசாதாரணமான சிஎக்கோ

சிஎக்கோ கண்களுக்கு புலப்படாதவற்றை பார்ப்பாள்
காதுகளுக்கு கேட்காவற்றை கேட்பாள்

சிஎக்கோ யாரும் செல்லா இடங்களுக்கு செல்கிறாள்
யாரும் செய்ய முடியாதவற்றை செய்கிறாள்

சிஎக்கோ என்னை நானாய் பார்க்க மாட்டாள்
எனக்கு அப்பால் இருக்கும் என்னை காணத்தவிக்கிறாள்

சிஎக்கோ வலிகள் எல்லாவற்றையும் கடந்து விட்டாள்
அன்பு கலந்த ராஜ்யத்தில் கலந்து விட்டாள்

அவள் குரல் திரும்ப திரும்ப அழைப்பதை கேட்கிறேன்
ஆனால் சிஎக்கோவிற்கு , மனித உலகிற்கு திரும்ப வர அனுமதியில்லை..

நன்றி http://www.paularcher.net/translations/extraordinary_chieko.html




---- கொலைவெறி தொடரும்

Friday, December 4, 2009

நான்கு கவிதைகள்

ரயில் விளையாட்டு - 1
———————————————————————

அலுவலகத்துக்கு தாமதமாக
வ‌ந்த சகஊழியர்
சற்றுமுன் பார்த்த
ரயில் விபத்தை விவரித்தார்
முகம் நசுங்கிப்போன
மனிதனுக்காக பரிதாபப்பட்டார்.

அடு‌த்த ஊழியர்
அவர் கிராமத்தில் பார்த்த
தற்கொலையை சொன்னார்
தலை தனியாக கிடந்ததாம்

அலுவலக மேலாளர்
அவரது அப்பா
ஓடும் ரயிலிலிருந்து
தவறி விழுந்து
இறந்துப்போனதாக சொன்னார்

அடு‌த்த அரைமணி நேரத்துக்கு
ஆளாளுக்கு ரயில்கள் ஓட்டினா‌‌‌ர்கள்
ஆறாவது மாடியெங்கும்
அடிப்பட்டவர்களின் கை,கால்கள்
சிதறி துடித்தன


ரயில் விளையாட்டு - 2
———————————————————————

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்

(ரயில் விளையாட்டு - 2 ஏற்கனவே வார்ப்பு.காம் மின்னிதழில் வெளியானது)


சில அறிவிப்புகள்
————————————————
நாலு வாரங்களில் சிவப்பழகு
விளம்பரம் கீழே

ஆறே வாரங்களில்
தொப்பை குறைய
இன்னொரு விளம்பரம் இருந்தது

பக்கத்தில் மூன்று வாரத்தில்
யோகா பயிற்சியென்று
அடுத்த அறிவிப்பு

இன்னும் பல…
எட்டு வாரத்தில் குழந்தை பிறக்க
ஏழு வாரத்தில் கணிப்பொறி
ஐந்து வாரத்தில் நீச்சல்
ஒருவாரத்தில் ஆங்கிலம்

எப்படி கூட்டினாலும்
வருடத்துக்கு இரண்டை
விட்டு வைத்திருந்தார்கள்
என்ன திட்டமோ?



மழையளவு
——————————
வானிலைசெய்தி வாசிக்கும் பெண்
அடுக்கிக்கொண்டே போனா‌‌‌ள்.
திருநெல்வேலியில் ஆறு செண்டிமீட்டர்
கு‌ற்றால‌த்‌தி‌ல் ஐந்து செண்டிமீட்டர்
விழுப்புரத்தில் பத்து செண்டிமீட்டர்
நுங்கம்பாக்கத்தில் ஆறு செண்டிமீட்டர்
வாசலில் எட்டி பார்த்தேன்.
கூரையிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளை
கையில் பிடித்து தரையில் கொட்டுகின்றாள்.
எதிர் வீட்டுச் சிறுமி.
தவறுக்கு மன்னிக்கவும்…
நுங்கம்பாக்கத்தில் ஆறரை செண்டிமீட்டர்
தொலைக்காட்சிப்பெண் சிரிக்கின்றாள்.

Thursday, December 3, 2009

சாரு நிவேதிதா 15 ஆண்டுகளுக்கு் முன்பு எழுதிய கவிதை

சாரு நிவேதிதா 15 ஆண்டுகளுக்கு் முன்பு எழுதிய கவிதை

பளிச் கவிதை - -3-- "பயம்"

பயம்
-----
பனங்கையின்
செல்லரித்துச் சிதைந்த
இடுக்கின் வழி சென்று
விரிசலுற்றிருந்த சுவரில்
குஞ்சு பொரித்து -
கவிதை எழுதிக் கொண்டிருந்த
அவனைப் பார்த்து
இருப்பின் பயங்கொண்டு
வெளிக்கும் உள்ளுக்குமாக
தத்தளித்து அலைந்து கொண்டிருந்த சிட்டுக்குருவி
நான் இன்னமும் இருக்கிறேன்
நீ இருக்கிறாயா
எ‌னக் கேட்டு எழுதாமலேயே
காணாமல் போய்விட்ட
சிநேகிதன்
காரணம் சொல்லாமல்
வீட்டுக்கு வருவதைத் தவிர்த்த
சிநேகிதி
சத்தில்லாக் கவிதையெழுதும்
உன்னைச் சீந்த மாட்டேனெனச்
சொல்லிப் புறக்கணிக்கும்
மொழி
எழுத நினைத்து
எழுதாமல் விட்ட
கவிதையின் பொருளை
அவளிடம் விளக்க
தன்னிரக்கம் தன்னிரக்கம்
எ‌னச் சொல்லித்
தலையிலடித்துக் கொண்டே
ஓடினாள்
சிநேகிதி




நன்றி
விருட்சம் கவிதைகள் தொகுதி-2
(1993-1995 வரையிலான கவிதைகள்)

Wednesday, December 2, 2009

நன்றாக...

நன்றாக நினைவில் உள்ளது

நவம்பர் மாத இறு‌தி‌ வியாழக்கிழமை. மாலை நான்கு மணி. இரண்டு நாட்கள் கழித்து பக்ரீத் பண்டிகை. மீர்சாகிப்பேட்டையில் கடைத்தெரு முழுதும் கலர் பொடிகள் தூவிய செம்மறி ஆட்டு மந்தைகள். அதன் மீது பள்ளிக்கூடம் விட்டு திரும்பும் சிறுவர்கள் கற்களையும், வாட்டர் பாக்கெட்டையும் வீசியபடி உற்சாகமாய் செ‌ன்றுக்கொண்டிருந்தனர் அவர்களை விட நான் உற்சாகமாய் செ‌ன்றுக்கொண்டிருந்தேன். ஆர்வம் கலந்த பதற்றம். மழை வரும் போல மேகங்கள் காட்சியளிக்க எதிரே ஒரு சாவு ஊர்வலம் அமைதியாக போய்க்கொண்டிருந்தது. ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் பர்தா போட்ட கல்லூரி பெண்கள் கண்களால் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.


ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அகநாழிகை வாசு தலை தெரிந்ததும் இன்னும் ஆர்வம் தாங்க முடியவில்லை. "புத்தகம் பைண்டிங்க்ல இருக்கு வாங்க" எ‌ன்று பிரஸ் இருந்த சந்துக்குள் அழைத்துச் சென்றார்.

நர்சிம் புத்தகம் வ‌ந்து விட்டது. என்னுடையதும், பா.ரா வுடையதும் வரவில்லை. பதற்றமாகி விட்டது. நர்சிம்மின் அய்யனா‌‌‌ர் கம்மாவை புரட்டிக்கொண்டிருக்கையில் ‌சில நிமிடங்களில் எனது கோயில் மிருகம் தொகுப்பை கொண்டு வந்தார்கள். பதற்றம் ஓடி பரவசம் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தை மறக்க முடியாது. கவிதைத்தொகுப்பு திருப்தியாக வந்துள்ளது. நன்றி அகநாழிகை. நன்றி வாசு.

அகநாழிகை பதிப்பகம் புத்தக வெளியீட்டு விழாவை டிசம்பர் 11 அன்று நடத்த இருக்கிறது. அறிவிப்பு குறித்தான பதிவு விரைவில்.

அனைவரையும் அழைக்கின்றோம்.

நன்றி
என்.விநாயக முருகன்


பி-கு

(இரண்டு நாட்களாக வேலைப்பளு. இர‌வி‌‌ல் சாமகோடாங்கி போல வீடு திரும்புவதால் புத்தக முன் அட்டையை ஸ்கேன் செய்ய முடியவில்லை.)

Tuesday, December 1, 2009

பறப்பதற்கு ஆசை - கவிதை/உரையாடல் கவிதை போட்டிக்காக

கவிதை/உரையாடல் கவிதை போட்டிக்காக...

பறப்பதற்கு ஆசை
—————————————————

வண்ணத்துப்பூச்சி எனக்கு பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி ஓவியங்களும் பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி பற்றிய
கவிதைகளை ‌மிகவு‌ம் பிடிக்கும்
சொல்லிக்கொண்டே போனவனிடம்
உடலெல்லாம் முட்கள் கொண்ட
நெளியும் கூட்டுப்புழுவொன்றை காட்டினேன்
குமட்டிக்கொண்டு வருவதாக சொன்னான்

இருப்பதை விட்டு
பறப்பதன் அர்த்தம் புரிந்தது


நன்றி
என்.விநாயக முருகன்


குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)...

Monday, November 30, 2009

பிடித்த 10 பிடிக்காத 10

பிடித்த 10 பிடிக்காத 10

நண்பர் அசோக் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.

இன்னைக்கு பிடிக்கறவங்க நாளைக்கு பிடிக்காமல் போகலாம். இன்னைக்கு பிடிக்காதவங்களை நாளைக்கு பிடித்து போகலாம். மாறுவது மனம் எ‌ன்ற சப்டைட்டிலுடன் செல்வதால் இங்கு பிடிக்காதவர் பட்டியலில் வரும் நண்பர்கள் கோவிச்சுக்க வேண்டாம்

1.நடிகை

பிடித்தவர் : வேற யாரு? நமீதா :)

பிடிக்காதவர்: வேற யாரு? அம்மா வேஷத்துல நடிக்கற நடிகைகள் அனைவரும்


2.அரசியல்வாதி

பிடித்தவர் : தமிழருவி மணியன் (யாருப்பா இவரு? நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது)
வை.கோ (அய்யோ பாவம்)

பிடிக்காதவர்: அனைவரும்

3. உணவு

பிடித்தவை : நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே நீங்கள் எல்லாம் (உடும்புக்கறி
சாப்பிட்டிருக்கீங்களா? சூப்பரா இருக்கும் )

பிடிக்காதவை: ரசம்

4. இயக்குனர் :

பிடித்தவர் : முன்னாள் பாரதிராஜா
பிடிக்காதவர் : இன்னாள் பாரதிராஜா , பாலசந்தர், ராம நாராயணன்

5. எழுத்தாளர்

பிடித்தவர் : தி.ஜா, தஞ்சை ப்ரகாஷ்,கரிச்சான்குஞ்சு, சாரு,இ.பா(ஊர் பாசம்)
பிடிக்காதவர் : இன்னாள் பாலகுமாரன்

6. இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்,எம்.எஸ்.வி,டி.எஸ்.பி
பிடிக்காதவர் : ம்ம்.. யோசிக்கனும்

7. கவிஞர்கள்

பிடித்தவர் : பாரதி,தேவதச்சன்,நகுலன்,கல்யாண்ஜி,முன்னாள் மனுஷ்ய புத்திரன்,
ஞானக் கூத்தன் ,முகுந்த் நாகராஜன்

பிடிக்காதவர் : பிடிக்காதவர் எ‌ன்று சொல்ல முடியாது, மனதை அவ்வளவாக
பாதிக்காதவர் வைரமுத்து

8. ஊர்கள்

பிடித்தது : கும்பகோணம் (பிறந்தது), சென்னை (வாழவைப்பது)

பிடிக்காதது: புதுக்கோட்டை (சரியான தூங்குமூஞ்சி ஊர்)

9. பதிவர்


பிடித்தவர் : என்.விநாயக முருகன்
(இந்த மூஞ்சிக்கே இந்த மூஞ்சிய பிடிக்கலனா‌‌‌ வேற எந்த மூஞ்சிக்கு நம்மள பிடிக்கும்)

பிடிக்காதவர்: அனானிமஸ் பெயரில் பின்னூட்டம்,இடுகை எழுதுபவர்கள்.(ராஸ்கல்ல்ஸ்ஸ்)

10. காமெடியன்

பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், என்.எஸ்.கே

பிடிக்காதவர் : சோ, தங்கபாலு, சு.சுவாமி

நாலு பேரை கூப்பிடனும்..

1. கதிரவன்

2. மண்குதிரை

3. சி.கருணாகரசு

4. நந்தா

5. அனுஜன்யா

Sunday, November 29, 2009

குழப்பம்

ஜ்யோவ்ராமின் குழப்பத்துக்கு ஒரு CounterPart கவிதை

குழப்பம்
—-------
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
அப்புறம் என்ன ஆச்சு?
ஆறாம் வகுப்பு
சிறுவன் கேட்டான்
மரத்தை வெட்டி
காகிதம் செய்தார்கள்
இப்படி எழு‌தினார்கள்
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்

குளம் என்ன ஆச்சு?
குழம்பித்தான் போச்சு

Saturday, November 28, 2009

தப்பில்லை & இரக்கம்

தப்பில்லை
----------
வெளியில் தெரியாத வரை
கடவுளை கூட புணரலாம்
கனவிலும், கற்பனையிலும்
தப்பில்லை


இரக்கம்
---------
அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போதெல்லாம்
பின்னிரவில் பார்க்க நேரிடுகிறது
பிளாட்பாரத்தில் உறங்கும் குழந்தைகளை

இருப்பதிலேயே அழகான
ஏதாவது குழந்தையை
மனதுக்குள் தத்தெடுத்து
வீடுவரை அழைத்துசெல்கிறேன்
வீட்டினுள் செருப்பை கழட்டியவுடன்
அதையும் துரத்தி விடுகின்றேன்

Friday, November 27, 2009

பசங்க

வலி
—–--
குழந்தைகள் புழங்கும்
வீட்டில்
பொம்மைகள்
நசுங்க நசுங்க
பெருகுகிறது
சந்தோஷத்தின் வலி.

திருஷ்டி பொட்டு
———--------——–
பிறந்த குழந்தையை
பார்க்க வந்தவர்கள்
எவ்வளோ அழகென்று
தூக்கி கொஞ்சிவிட்டு சென்ற
தினம் முதல்
திருஷ்டி பொட்டொன்று மின்னியது.
எவ்வளோ அழகென்று
பொட்டையும் கூடவே
கொஞ்சிச் சென்றார்கள்.

அழகுப்படுத்தியது
———————————
பூந்தோட்டத்தில் பூத்த
வெள்ளைநிற பூக்களுக்கு
மஞ்சள் வண்ணமும்
மஞ்சள் பூக்களுக்கு
நீலநிறமும்
நீலப்பூக்களுக்கு பச்சை வண்ணமும்
தந்து அழகுப்படுத்தியதுப்போல
இருந்தது
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்.

படைப்புத்தொழில்
————————-

குழந்தை உடைத்து
நொறுக்கிய பொம்மைகள்
கொண்ட மூட்டையை
பரணிலிருந்து திட்டியபடியே
பிரித்தாள் மனைவி

சிதறி தெறித்த
கரடி யானை
சிங்கம் புலி
குரங்கு எ‌ன்று
வீடெங்கும் காடான‌‌‌து

கரடியின் கால்களோடு
சிங்க உடலை சேர்த்துக்கொண்டு
புலி முகத்தில் ஜீவனொன்று
உலவ ஆரம்பித்தது காட்டினுள்

Wednesday, November 25, 2009

எட்டாவது வார்டிலிருந்து

எட்டாவது வார்டிலிருந்து
----------------------

தேங்கிநின்ற மழைநீருக்கு
மனு கொடுக்க சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடு‌த்த இரண்டுநாட்களில்
வெயில் அடித்து காய்ந்துவிட்டது

வெயிலுக்கு நிழற்குடை நிறுத்தம்
வேண்டி சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடும்
சொல்லி முடிக்கவில்லை
மழை கொட்ட ஆரம்பித்தது

மழைநீரில் அறுந்துக்கிடந்த
மின்சார கம்பிக்கு சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடு‌த்த நாலுநாள் பவர்கட்

கடைசியாக சென்றபொழுதும்
காதுகொடுத்து கேட்டார்
இதுவும் கடந்துப்போகுமென்றார்
எட்டாவது வார்டின் ஜென்குரு

Monday, November 23, 2009

சும்மா ஒரு கவிதை

ஜ்யோவ்ராம் சுந்தரின் சும்மா இருத்தல் கவிதை படித்ததும் எனக்கும் சும்மா ஒரு கவிதை எழுத தோன்றியது.சும்மா படித்து பாருங்க


சும்மா ஒரு கவிதை
——————————————————

எப்படி இருக்க?
என்பதை தொடர்ந்து
என்ன செய்கிறாய்?
எ‌ன்று கேட்டேன்
நீண்டநாட்களுக்கு பிறகு சந்தித்த
நெருங்கிய நண்பனை

சும்மா இருப்பதாக
சொன்னான்
சும்மா எப்படி இருப்பது
எதார்த்தமாக கேட்டேன்
சும்மா இருப்பதின்
சுமைகள் பற்றி
அரைமணிநேரம் பேசினா‌‌‌ன்.

சும்மா இருந்த சங்கை
ஊதி கெடுத்த ஆண்டியை
பற்றி சொன்னான்

பால்வண்ணம் பிள்ளை
இறுதியில் சொன்ன
சும்மா கெட, சவமே
வரியை மேற்கோள் காட்டினான்

பாடல்பெற்ற தலமொன்றில்
சும்மா இருக்கும் சிவனை பற்றி
ஐந்து நிமிடம் பேசினா‌‌‌ன்

சற்று வேகமாக
ஊதி கெடுத்த
வருத்தத்துடன் திரும்பினேன்

Friday, November 20, 2009

இரண்டு கவிதைகள்

திணைமயக்கம்
—————————————
தேநீர் கடையில் நின்றிருந்தவர்
தமிழ் ஆர்வலராம்
கோபத்தோடு கத்தினார்
கலாச்சார கண்றாவி
கசக்கி வீசினார் செய்தித்தாளை

காசிமேடு அருகே
கள்ளக்காதல் எதிரொலியாம்
கணவன் வெட்டி கொலை
மனைவி கைது
திருச்சியை சேர்ந்த
வாலிபருக்கு வலைவீச்சு
செய்தித்தாளை எட்டிப் பார்த்தேன்

அட.…திணைமயக்கம்
குறிஞ்சி நெய்தல்
பெருந்திணை எ‌ன்று
ஒரு நிமிடம் ஓடியது

Tuesday, November 17, 2009

"இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது இரண்டு கவிதைகள் வாசிக்கலாம்...

கண்ணீர் அஞ்சலி
-----------------

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது



விசாரித்தல்
-----------------
எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.


-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, November 13, 2009

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

முந்தைய பதிவை போஸ்ட் செய்த பிறகே இன்று குழந்தைகள் தினம் எ‌ன்று தெரிய வந்தது. எங்கள் அலுவலக வலைப்பூவில் எழு‌திய ‌சில கவிதைகள்...


பங்கு
—————

முன்பொருநாள்
அண்ணன்களோடு
கடல் அலைகளில்
கால் நனைத்து
ரோலர் கோஸ்டரில்
குட்டிக்கரணமடித்து
குதிரைச் சவாரி பிறகு
மணலில் சிறிது
புரண்டு இளைப்பாறி
நீண்ட சாப்பாட்டு மேசையின்
இரண்டுபுறமும் அமர்ந்து
உற்சாகமாய் சாப்பிட்டது
நிழலாடுகிறது
அன்று
பேமிலி தோசையை
பங்கு பிரிக்காமல்
எப்படி சாப்பிட்டோமென்று
இன்றுவரை நினைவில்லை



திருடன் போலீஸ்
————————————————
நான் திருடன்
நீ போலீஸ் என்று
சொன்ன சிறுவன்
ஆட்டத்தின் சிறிய
இடைவெளியில்
நீ திருடன்
நான் போலீஸ் எ‌ன்று
உத்யோகம் மாறி
விளையாடுகிறான்
ஆட்டத்தின் இறுதியில்
உத்யோகம் பறிபோன
முன்னாள் போலீசும்
திருந்திய இந்நாள்
திருடனும்
ஒருவரையொருவர் பார்த்து
சிரித்தபடி செல்கிறார்கள்



தீபாவளி இரவன்று
————————————————
தீபாவளி இரவன்று
சாலையை கடந்துச்
செல்கையில்
மூடப்பட்ட கடைகளின்
ஷட்டர் முன்னால்
வெடிக்காத வெடிகளை
சேகரித்தபடி அமர்ந்திருந்திருந்தான்
பேப்பர் பொறுக்கும் சிறுவனொருவன்

அவன் சேகரித்த வெடிகளில்
ஏதாவது ஒன்றின் திரி
நமத்துப்போகாமல் இருக்க
கடவுளை பிரார்த்திக்கிறேன்



கவிதையெழுதி
——————————————

என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.

பிரசுரமாகாத கவிதையின்
பல துண்டுகளோடு
சிரித்தது கடவுளொன்று
எதுவும் நடக்காததுபோல

இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று



பேய்க்கதைகள்
—————————————
குழந்தைகளை
கூட்டி வைத்துக்கொண்டு
பேய்க்கதைகள் சொன்னேன்.
வித ‌விதமாக கற்பனை செய்து
புது புது பேய்களை நானே
உருவாக்கினேன்.
இ‌து வரை கேட்டறியாத
ஒலிகளையெழுப்பி
கதைகளை நீடித்தேன்.
பிறகு வீட்டின்
அறையிலிருந்து வெளிவருகையில்
திடீரென என் முன்னால்
நான் கேட்டறியாத ஒலிகளுடன்
குதித்து பயமுறுத்தி ஓடுகையில்
கொஞ்சம் பயந்துத்தான் போனேன்
ஒருவேளை பேய் இருக்குமோ?


கண்திருஷ்டி
———————————
அம்மாடியோவ் எவ்ளோ உசரமென்று
குதித்த குழந்தையொன்றை
வைத்தகண் வாங்காமல்
வியப்போடு பார்த்தார்
தெருமுனையில்
பு‌திதாக வந்திருந்த
நாற்பதடி கண்திருஷ்டி விநாயகர்.
வீட்டுக்கு போய் சுத்திப்போட
சொன்னார்கள் யாரோ.
சுத்திப்போட்ட ஆறாம்நாள்
கரைந்துப்போனது.

ரிக்‌ஷா

ரிக்‌ஷா
------


நேற்று இரவு அகநாழிகை வாசு அவர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் இரண்டு வயது‌ மகள் அருகே வ‌ந்து என்னை பேசவிடாமல் சத்தமாக கத்தி தொந்தரவு செய்துக்கொண்டிருந்தாள்.

தொலைபேசியில் பேசும்போது மட்டும் என் மகளுக்கு என்ன தோன்றுமோ தெரியவில்லை.

எங்கள் வீட்டில் யார் தொலைபேசி பேசினாலும் அவள் காதில் ‌சில வினாடிகள் தொலைபேசியை வைக்க வேண்டும். எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவது அவளுக்கு புரியுமோ புரியாதோ எனக்கு தெரியாது. அந்த பேச்சு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்பதில் அவளுக்கு அப்படி ஒரு ஆர்வம். குழந்தைகள் நாம் பேசுவதை நமது முகம்,நாக்கு உடல் அசைவுகள் மூலம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கின்றார்கள். இவை எதுவும் இல்லாமல் கையடக்க ஒரு மின்னணு கருவியில் இருந்து பேச்சு வந்தால் அவர்களுக்கு எப்படி வினோதமாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் வரும் குரல்கள் கூட அவ்வளவாக பிடிப்பதில்லை. தொலைக்காட்சியில் உருவங்கள் பேசுவதை பார்த்து பழகி இருக்கலாம். நிறைய குழந்தைகளை நுண்மையாக கவனித்துள்ளேன். தொலைபேசி/மொபைல் போன்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு வசீகரமாகவே இருக்கின்றது. உருவமே இல்லாமல் யாருடா இது நம்ம அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பது. ஒருவேளை சின்ன வயசுல நம்ம கனவுல வந்து சிரிக்க வைத்து பின்பு காணாமல் சென்று விட்ட கடவுளா என்று கூட நினைத்திருக்கலாம்


நானும் வாசுவும் பேசிக்கொண்டிருக்கையில் குழந்தைகளின் மொழித்திறன் பற்றி பேச்சு சென்றது. என் மகளின் ஆர்ப்பாட்டம் கேட்டு வாசு விசாரித்தார். கெளதம சித்தார்த்தனின் நீல ஊமத்தம் பூ படித்தீர்களா என்று கேட்டார். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. நான் அகநாழிகையில் அஜயன்பாலா கட்டுரை பிறகு கவிதைகள் தவிர எதுவும் படிக்கவில்லை. சங்கடத்துடன் இல்லை என்றேன். பிறகு இரவு அந்த கதை படித்துப்பார்த்தேன். அருமையான கதை. நான் இங்கு சொல்ல வந்தது அந்த கதை பற்றி அல்ல. அந்த கதையை ஒட்டி நான் அறிந்த சில உண்மைகள்.


நாம் நினைப்பதுபோல குழந்தைகள் மொழியை கற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் வினோதமான ஒலிகள், வித்தியாசமான முக அசைவுகள், சப்தங்களின் கலவைகள் இவற்றை மட்டுமே கூர்ந்து கவனிக்கின்றார்கள். மொழியின் அரசியல் அவர்களுக்கு பிடிப்பதில்லை. நாம்தான் களிமண்ணை அழகிய பானையாக்குகின்றோம் என்ற பெயரில் நமது மொழியை அவர்கள் மேல் திணிக்கின்றோம். உண்மையில் நாம் அழகிய பானையை உடைத்து களி மண்ணாக்குகின்றோம். மொழியின் அரசியலை அவர்களுக்கு சிறுவயதில் கற்று தந்து அதை தேர்வில் அப்படியே வாந்தி எடுக்க வைக்கின்றோம்.

குழந்தைகள் மொழியை விட ஒலிக்குறிப்புகள், சப்தங்களை மட்டுமே ரசிக்கின்றார்கள் என்பதை நான் குருட்டாம்போக்காக சொல்லவில்லை. ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளின் சரணாலயத்துக்கு வரும் குழந்தைகளின் உற்சாகத்தை கவனித்து பாருங்கள். அதே நேரம் செயற்கையான உள்விளையாட்டரங்கு, ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களுக்கு அழைத்து வரும் குழந்தைகளை கவனித்து பாருங்கள். இரண்டு குழந்தைகளுக்குமிடையில் உள்ள உற்சாகம் புரியும். நமது ஆழ்மனதில் காடு எப்போதும் ஒரு படுகையாக படிந்து கிடக்கின்றது. இயற்கையான ஒலிகள் மூலமே ஆதிமனிதன் மொழியை கற்றான். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டு மழை சிறுகதைத்தொகுப்பில் "இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன" எ‌ன்ற அருமையான ஒரு கதை உள்ளது. படித்து பார்க்கவும். வாய்பேச முடியாத தன் ஆறுவ்யது மகளை தோளில் சுமந்தபடி ஒவ்வொரு பறவையாக அது கூவும் குரலுக்காக தேடிச்செல்லும் தகப்பனின் தகப்பனின் அவலம் பற்றிய கதை. மொழியை அதன் இலக்கணங்களை மொழியின் அரசியலை நாம் திணிக்காதவரை குழந்தைமை அப்படியே இருக்கின்றது. மொழியின் அரசியல் புரிய ஆரம்பித்ததும் அவர்களிடம் ஒரு வித செயற்கை தன்மை வந்து அழகு போய்விடுகிறது..

ஐந்து வயதிலேயே திருஞானசம்பந்தர் பாடல்கள் எழுத ஆரம்பித்தது எனக்கு அதிகப்பிரசிங்கித்தனமாக படுகிறது. (எனக்கு பத்து வயது வரை சரியாக பேச வராது. அந்த பொறமை கூட கரணம் என்பது வேறு விசயம்) குழந்தைகள் இயற்கையான சப்தங்கள் ஒலிக்குறிப்புகளை வைத்து தாங்களாகவ்ய ஒரு சிம்பொனியை தயார் செய்கின்றார்கள். அந்த சிம்பொனி பெரியவர்களுக்கு புரிவதே இல்லை. நாம் சொல்லும் இலக்கணம் நாம் வரையறுத்த விதிமுறைகளில் இது அடங்குவதில்லை. அசோகமித்திரனின் அருமையான ஒரு பக்க சிறுகதை. இதை படித்து பாருங்கள்.


ரிக்ஷா
——————
அப்பா அப்பா ரிஷ்கா ரிஷ்கா என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்‌ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.

“ரிஷ்கா இல்லை. ரிக்‌ஷா ”

ரவி அருகே வந்தான்.

“எங்கே சொல்லு - ரிக்‌ஷா”

“ரிஷ்கா”

“ரிக்-ஷா”

“ரிஷ்கா”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

“அப்படி இல்லை, இதோ பார், ரிக்,”

“ரிக்.”

“ஷா”

“ஷா”.

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

ஊம்கூம், மறுபடியும் சொல்லு,ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ஷா.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

சிறிது நேரம் மௌனம் நிலவியது.

“பார் ரவி, என்னைப் பார்த்துச் சொல்லு. ரீ.”

“ரீ.”

“இக்.”

“இக்.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா .”

“ரிஷ்கா.”

“ரிக்‌ஷா.”

“ரிஷ்கா.”

உலகம் ஷணகலம் அசைவற்று இருந்தது.

“ரவி.”

“அப்பா.”

“சரியாச் சொல்லு. ரிக் ரிக் ரிக்.”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ரிக்ஷா,ரிக்ஷா”

“ரிஷ்கா,ரிஷ்கா”

“ரிக்‌ஷா ,”

“ரிஷ்கா,ரிஷ்கா”

காய்கறி வாங்கப் போன மனைவி திரும்பி வந்துவிட்டாள். வந்த பிறகுதான் அவள் குடையை மறந்துவிட்டு வந்தது தெரிந்தது.

“ஐயோ அவ்வளவு தூரம் மறுபடியும் போக வேண்டுமே!” என்றாள்.

“ரிக்‌ஷாவில் போய்விட்டு வந்துவிடேன்” என்றேன்.

மனைவி என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.

“என்ன?” என்றேன்.

“இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“ரிக்‌ஷாவில் போய் விட்டுவா என்றேன்.”

“ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி விழுந்தது” என்றாள்.

நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருந்தான்.


குழந்தைகள் , மொழி ,பாடம் ,பரீட்சை எ‌ன்ற பேச்சு வரும்போதெல்லாம் அசோகமித்திரனின் இந்த சிறுகதையை நினைத்துக் கொள்வேன்.

நகல் செய்தல்

ஜ்யோவ்ராம் சுந்தர் தளத்தில் ஒரு கவிதை படித்தேன். சிலநாட்கள் முன்பு இதேபோல ஒரு கவிதை எழுதி உயிரோசைக்கு அனுப்பி வைத்தேன். ஏனோ அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். எனக்கும் அவ்வளவாக திருப்தி இ‌ல்லை. பெட்டிக்குள் இருந்து மீண்டும் எடுத்து படித்தேன். இதே போன்ற ஒரு பார்வை சுந்தருக்கும் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைக்காட்சி அபத்தங்களை கொஞ்சம் அவதானித்தால் போதும். இத‌ன் வக்கிரம் பிடிபடும்


நகல் செய்தல்
---------------
மனைவியுடன் கூடும்போதும்
பாடாய்படுத்துகிறது
சற்றுமுன் டி.வி யில்
பார்த்த நடன பெண்களின்
மார்புகளும் இடுப்புகளும்
எந்த நடிகரின் அல்லது
எந்த நடிகையின் ஜாடையில்
பிறந்து தொலைக்கப்போகிறதோ
இன்று நிகழும்
ஜனன முயற்சியின் முடிவில்

Thursday, November 12, 2009

நான்கு கவிதைகள்

நான்கு கவிதைகள்
—————————————————





ஜி-8
————
ஜி-8 மாநாட்டை சீர்குலைக்க
வ‌ந்த தீவிரவாதிகளை
நீண்ட புலனாய்வுக்கு பிறகு
கண்டுபிடித்தார்களாம்.

உயர்பாதுகாப்பு அதிகாரி
செய்தியாளர்களிடம் சொன்னார்.
பிடிபட்டது மூன்று பேராம்.
நீண்ட கூரான ஆயுதங்கள்
மொத்தம் ஆறு வைத்திருந்தார்களாம்.
கண்டனம் தெரிவிக்க
கருப்புநிற ஆடைகள் அணிந்திருந்தனராம்.
குறிப்பாக தாடி வைத்திருந்தார்களாம்.
சந்தேகமே இல்லை. அவர்களேதான்.

மென்மையான விசாரிப்புக்கு பிறகு
இரண்டுபேர் குற்றங்களை
ஒப்புக்கொண்டார்களாம்.

ஒன்று மட்டும்
இன்னமும் பிடிவாதமாக
மே..மே…மே… எ‌ன்று கத்திக்கொண்டிருக்கிறதாம்.


ஓடிப்போனவன்
——————————————–

ஓடிப்போன நண்பன்
நாலு நாள் கழித்து
வீடு திரும்பினா‌‌‌ன்.

விம்மியபடி வாசல் வந்து
கட்டிக்கொண்டாள் அவனின் மனைவி.
ஐந்துவயது மகனுக்கு
கால்கள் தரையில் இல்லை
கொள்ளிப்போட வந்த
சந்தோசத்தில் அப்பா.
அப்பாடாவென்று
ஆனந்தப்பட்டார்கள் நண்பர்கள்.
பாவம்
என்ன கஷ்டமோ?
என்ன ஞானமோ?
பாதியில் வந்துவிட்டான்.

நிதானமாக விசாரிக்க வேண்டும்
பாதி புத்தனை.



மழை- ஒரு உண்மை
————————————————————
மழை எனக்கு பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக
மழைப்பற்றி கவிதையெழுதுவது
இன்னும் பிடிக்கும்.
இன்னும் குறிப்பாக
ஜன்னலுக்கு வெளியே
பெய்யும் மழையை எழுத பிடிக்கும்.
இறுதி குறிப்பாக
ஜன்னலுக்குள்ளிருந்து எழுத பிடிக்கும்.

Monday, November 9, 2009

"இரண்டாவது நாள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த "இரண்டாவது நாள்" கவிதை வாசிக்க...

இரண்டாவது நாள்
----------------
சிவப்புநிற சிக்னலில்
கார் கதவை தட்டுகின்றாள்
பொம்மை விற்கும் சிறுமியொருத்தி.
சாப்பிட்டு இரண்டு நாள் ஆகின்றது.
கடந்த சிக்னலில் கேட்ட அதே ஓலம்.
இன்னொரு பொம்மை
வாங்கவும் ஒப்பவில்லை மனம்.
பார்வையைத் தவிர்த்து
பச்சை நிறம் நோக்கி வீசுகின்றேன்.
ஒரு பொம்மை, ஒரு சிறுமி,
ஒரு சிக்னலுக்கு ஏங்குகின்றது மனம்.
ஒரு நாள் பட்டினிக் கூட பழகியிருந்தது.


-நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, November 8, 2009

நிஜம் - திண்ணை.காம் & கீற்று.காம் கவிதை

இந்த வார திண்ணை.காம் மற்றும் கீற்று.காமில் வெளியான நிஜம் கவிதை...


நிஜம்
ஆறு வாரங்கள் ஓடிய
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
ரியாலிட்டி ஷோவொன்றில்
ஆறாவது வாரம் நடந்தது
நிஜமான கல்யாணமாம்.
ஆறு வாரமும் நடந்த
சுயம்வர ஒளிப்பரப்பும்,
நேர்காணல்களும் நிஜமாம்.
எல்லாம் முடிந்தபின்னர்
எட்டாவது வாரம் நடந்ததும்
நிஜமான விவாகரத்தாம்.
ஆறாவது நிஜத்துக்கும்,
எட்டாவது நிஜத்துக்கும்
ஆறு வித்தியாசங்களாம்.


- நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, November 7, 2009

Mountain Patrol - உலகத்திரைப்படம்

Mountain Patrol - உலகத்திரைப்படம்

கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் இருப்பது திபெத்திய கோஜெலி மலைக்கிராமம். இங்கு வசிக்கும் அ‌ரிய வகை கலைமான்களின் தோலுக்காக சட்டத்தை மீறி வேட்டையாடுகின்றார்கள் சிலர். அவர்களை பிடிக்க மக்களே சேர்ந்து சில தன்னார்வ காவல் குழுக்களை அமைக்கின்றார்கள்.

நாலு வரி செய்தி. நாலு வரியை வைத்து அதிகம் போனா‌‌‌ல் ஐந்து நிமிட ஆவணப்படம் எடுக்க முடியும்? ஆனா‌‌‌ல் இயக்குநர் லூசான் இதை தனது இயக்கத்தால் அற்புதமான 90 நிமிட திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

சுற்றிலும் ஏகாந்த பனிமலைகள். நடுவில் சமவெளியில் ஒரு ஜீப்.
ஜீப்பினுள் ரோந்துப்பணியில் இருக்கும் காவலர் ஒருவர் அசந்து உறங்கிக்கொண்டிருக்கின்றார்.பக்கத்தில் நீண்ட துப்பாக்கி.
ஜீப் கதவை ஒரு வயதான நபர் தட்டுகின்றார். கண்விழிக்கும் காவலர் வெளியே பார்க்கின்றார். அந்த வயதான நபர் பின்னால் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள். காவலர் சுதாரித்து துப்பாக்கியை தொட முயல்கின்றார். அதற்கு முன்னால் வெளியே நிற்கும் அனைவர் துப்பாக்கிகளும் காவலர் நெஞ்சுக்கு குறிவைக்கின்றன.

கோஜெலி என்னும் மலைக்கிராமத்தில் மான் வேட்டைக்காரர்களால் சுடப்பட்டு இறந்துப்போன காவலருக்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன. அதைப்பற்றி செய்தி சேகரிக்க பீஜிங்கிலிருந்து காயூ எ‌ன்ற ரிப்போர்ட்டர் வருகின்றான். மான் வேட்டைக்காரர்களை பிடிக்கும் சிறப்பு காவல்படை ரிதாய்யை காயூ சந்திக்கின்றான். காவல்படை மான் வேட்டைக்காரர்களை தேடி பனிமலைகளில் பயணிக்கின்றனர். காயூவும் இவர்களோடு சேர்ந்து கேமராவுடன் செல்கின்றான். வழியில் நூற்றுக்கணக்கான தோல் உறிக்கப்பட்ட இறைச்சி வெட்டியெடுத்த மான்களின் எலும்புக்கூடுகள். தினசரிகளில் மான் வேட்டை நபர் கைது எ‌ன்று வெறும் ஒற்றை வரிச்செய்தியாக நாம் தாண்டிச்செல்கின்றோம். திரைப்படத்தின் இந்தக்காட்சி மனதுக்குள் கத்திப்போல இறங்கி செல்கின்றது.

மான் வேட்டைக்காரர்கள், அவர்கள் தரும் தோலை எடுத்துச்செல்லும் கிராமத்து மனிதர்கள் (கேரியர்கள) அவர்களது மான் வேட்டையை தடுக்கும் காவல்குழுவின் சிரமங்கள். சம்பளம் கூட இல்லாமல் அவர்கள் தன்னார்வக்குழுவாக பணிபுரிவது. கடத்தல்காரர்களிடமிருந்து பிடிபடும் தோலை சிலநேரங்களில் விற்று மருந்து,உணவுகள் வாங்கிக்கொள்வது எ‌ன்று படம் முழுக்க அற்புதமாய் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
காவல்குழுவை சேர்ந்த ஒருவன் தனியாக ஜீப்பில் வரும்போது
புதைமணலில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விடும் காட்சி நெஞ்சை பதறவைக்கின்றது.

மிகுந்த சிரமத்துக்கிடையில் பனிப்பொழியும் திபெத்திய மலைகள், புதைமணல்கள் நிரம்பிய பாலைகளிடையில் இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் லூசான். பலன்? ஆறு உலகத்திரைப்பட விருதுகள். சீன அரசாங்கம் இந்தப்படம் வெளியானவுடன் கோஜெலி பகுதியை பாதுகாக்க சட்டம் இயற்றியது. கலைமான்களை பாதுகாக்க சட்டம் இயற்றியது. இதைவிட ஒரு கலைஞனுக்கு வேறு என்ன வேண்டும்?

நேஷனல் ஜியாக்ரபிக் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

Friday, November 6, 2009

பளிச் கவிதை - 2 --- "நட்பு"

இந்த வார திண்ணை.காமில் வ‌ந்த நாவிஷ் செந்தில்குமார் கவிதையொன்று...

நட்பு

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...


நாவிஷ் செந்தில்குமார் எனது அலுவலகத்தில்தான் பணிபுரிகின்றார். எங்கள் அலுவலகத்தின் வலைப்பூக்களில் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். தவிர திண்ணை.காம், கீற்று.காமில் இவரது பல கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றன.


-நன்றி
என்.விநாயக முருகன்


பளிச் கவிதை-1

Tuesday, November 3, 2009

தெகிமாலா நாட்டு சரித்திரம் - ஒரு கதை

கீற்று.காமில் முன்பு எழுதிய கதையொன்றை இப்போது படித்துப்பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ரெய்டு விட்டிருக்கலாமோ எ‌ன்று தோ‌ன்றியது.சமீப காலமாக இந்த தாத்தாக்கள் அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை....



தெகிமாலா நாட்டு சரித்திரம்
என்.விநாயக முருகன்


முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு உணவு பஞ்சம் என்று எதுவும் இல்லை. நகத்தால் பூமியை கீறினாலே போதும் தண்ணீர் பீறிட்டெழும். வானத்தில் இருந்து அடிக்கடி தேவதைகள் தெகிமாலா நாட்டில் இறங்கி இளைப்பாறி செல்வர். தேவதைகளும், மனிதர்களும், தேவதூதர்களும் சந்தோசமாக ஒன்றாக இருந்த அந்த தெகிமாலா நாடு பார்ப்பதற்கு இந்திரனுக்காக மயன் வடிவமைத்த இந்திரலோகம் போல இருந்ததாக லெமூரியா கல்வெட்டு ஒன்்று சொல்கிறது. தெகிமாலா நாட்டு தெ‌ன்கிழக்கே கடல் நடுவில் இகிமாலா என்றொரு சொர்க்கப்புரி தீவு நாடு இருந்தது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆனா‌‌‌ல் இந்த சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருநாள் திடீரென தெகிமாலா நாட்டில் எல்லோருமே வயதாகிப் போனார்கள். அதாவது நாட்டில் எல்லாருமே தாத்தாக்கள், பாட்டிகளாக மாறித் திரிந்தார்கள். அனைவரும் வயதான மனிதர்களாக இருந்ததால் சண்டை சச்சரவு இன்றி சந்தோசமாக கலை, இலக்கியமென்று பொழுதைக் கழித்தார்கள். தெகிமாலாவின் முக்கிய பொழுதுப் போக்கு தெருக் கூத்து மற்றும் மந்திர பொட்டிகள் தரும் (பின்னால் சொல்கிறேன்) மாயாஜாலங்கள். தேவதைகளின் நடனம். தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அனைவரும் இப்படி வயதானவர்களாக மாற அந்த நாட்டில் ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்கள்தான் என்று தெகிமாலா நாட்டின் சரித்திரத்தை உளவியல் ரீதியாக ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். அப்படி ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்களைப் பற்றிய ‌சில குறிப்புகள் லெமூரியா கல்வெட்டில் காண கிடைக்கிறது. தாத்தாக்கள் என்றறு இவர்களை தெகிமாலாவில் விளித்து வந்தார்கள்.

தாத்தா நம்பர்-1

தெகிமாலா நாட்டில் ஒரு கவிஞர் தாத்தா இருந்தார். அவர் தெருக்கூத்து கலைக்கு பாடல்கள் எழுதி வந்தார். இவரது பாடல்கள் தெகிமாலா நாட்டு மக்கள் மத்தில் பிரபலம். இவரது பாடல்களை தெகிமாலா மக்கள் அடிக்கடி முணுமுணுப்பார்கள். தெகிமாலா நாட்டு ராஜா அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு மந்திரி அளவுக்கு இவரிடம் செல்வம் இருந்தது. எல்லாமே தெருக்கூத்துப் பாடல்கள் எழுதி ஈட்டியது. ஒரு தெருக்கூத்து பாடலுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் ஈட்டியதாக கல்வெட்டு செய்தியொன்று கூறுகிறது. தெகிமாலா நாட்டில் எப்போதாவது போர் வந்தால் இவருக்கு கோபம் வந்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் சில கவிதைகள் எழுதுவார். அவை மக்களுக்கான கவிதைகள் என்று சொல்லப்பட்டது. அனேகமாக அந்த கவிதைகள் நாலு வரியில் இப்படி இருக்கும்.

ஏ விதியே
உனக்கு கண்கள் இல்லையா?
என் செய்தாய்?
என் இன தெகிமாலா மக்களை
விதியே உன்னை திருத்துவேன்
வந்தால் நின்னை நசுக்குவேன்.

ஆனால் அடுத்த நாளே இந்த கவிஞர் தெருக்கூத்தொன்றில் வேறு பாட்டு எழுத சென்று விடுவார். பெண்களின் அங்க அசைவுகளையும், தெகிமாலா மலர்களையும் ஒப்பிட்டு இவர் எழுதும் பாடல்கள் தெகிமாலா இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இவர் எழுதும் பாடல்களின் உண்மையான உள்ளர்த்தம் தெரியாமல் தெகிமாலா மக்களும் இவரை கவி ராஜா என்று புகழ்ந்து வந்தார்கள். பூக்களால் ஆன கதவுகளே தாழ்ப்பாளை திறந்து விடுவாயா? என்று இவரது பாடல் வரிகள் தெகிமாலாவில் பிரசித்தம். கேட்பதற்கு இலக்கியத்தரம் போல தெரிந்தாலும் இதன் மறை பொருளில் ஒளிந்திருக்கும் கொச்சைத்தனம். மற்ற தெகிமாலா நாட்டு இலக்கியக் கவிஞர்களிடம் இவரது போலியான சமகால கவிதைகள், இலக்கியம் என்ற பெயரில் இசைக்கு ஏற்ப வார்தைகளை போட்டு நிரப்பும் பம்மாத்து எல்லாம் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டன.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தெகிமாலா நாட்டில் இவரைத் தவிர்த்து மற்ற சில கவிஞர்களும் இருந்தார்கள். பாவம் சமகாலத்தில் வாழ்ந்த அவர்கள் எல்லாம் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்தார்கள். இந்த கவிஞர் தாத்தாவுக்கு தெகிமாலா நாட்டு ராஜாவுடன் அரண்மனையில் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவு நட்பு இருந்தது. ராஜா என்ன தப்பு செய்தாலும் இடித்துக் கூறும் பழக்கம் இந்த தாத்தாவுக்கு இல்லை. தவிர யார் ராஜாவானலும் அவர்களிடம் நட்பு பாராட்டும் வழக்கமும் இந்த தாத்தாவுக்கு இருந்தது. அரண்மனையில் அவ்வப்போது ஆஜராகி ராஜாவை போற்றி நானூறு வரி கவிதையொன்றை பாடி பொற்காசுகளை பெற்று வருவார் (கவனிக்க - மக்களுக்கான கவிதைகள் நாலு வரிகள் மட்டுமே)

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இவர் தேவதைகளை காதலியுங்கள் என்று தெகிமாலா நாட்டு இளைஞர்களுக்காக எழுதிய பாடல்கள் பிரசித்தம். இவை ஓலை சுவடிகளில் பொறிக்கப்பட்டு தெகிமாலா நாடெங்கும் ஒரு பொற்காசுக்கு விற்கப்பட்டன. தெகிமாலா நாடெங்கும் வானிலிருந்து தேவதைகள் இறங்கி வந்தவண்ணமாக இருந்ததால் தெகிமாலா இளைஞர்களுக்கு தேவதைகள் கிடைப்பதில் அதிக சிரமம் இருந்ததில்லை. தேவதைகளை காதலிப்பதன் மூலமே தெகிமாலா மனிதர்கள் சிறப்புற்று வானுள் உறையலாம் என்பது இவர் தத்துவம். தெருக்கூத்து பாடல்களில் தேவதைகளை காதலிக்க சொன்னார். தேவதைகளும் இதை ஆமோதித்தன. இவ்வாறு தெகிமாலா மக்கள் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல இந்த கவிஞர் தாத்தாவால் தெருக்கூத்து மூலமாக மாற்றி அமைக்கப்பட்டு புது பரிணாமத்தில் மிளுங்க ஆரம்பித்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தாத்தா நம்பர்- 2

தாத்தா நம்பர்- 2 பெயரைச் சொன்னாலே தெகிமாலா நாட்டில் விசில் பறக்கும். நடந்து வந்தால் (எப்படி தாத்தா இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக நடக்கிறார் என்பது யாருக்கும் புரியாத தங்கமலை ரகசியம்) அனல் பறக்கும். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். தெகிமாலா நாட்டின் அர‌சிய‌ல், கலை, இலக்கியங்களில் முக்கியமான ஆளுமை செலுத்தக்கூடிய நபர். இந்த தாத்தா ஒருபோதும் பாட்டிகளுடன் ஜோடியாக கூத்தில் நடிக்க மாட்டார். தன் பேத்திக்கு பேத்தி வயதில் உள்னள பெண்களுடன்தான் நடிப்பார். ஒரு தெருக்கூத்தில் தப்பு தப்பு தப்பு தப்பு தப்புக் கிழவி என்று பாடி வைக்க அந்த தெருக்கூத்துக்கு கிழவிகளின் கூட்டம் வராமல் போனது பெரும் சோகம். கூத்து செம பிளாப். பிறகு இவர் தெகிமாலா நாட்டின் பக்கத்தில் உள்ள கெகிமாலா நாட்டுக்கு சென்று ஆயில் மசாஜ் செய்து நாடி, நரம்புகளை நீவி தெம்பாக கூத்துக் கட்ட வந்தார். கூத்தும் களைக் கட்டியது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இந்த தாத்தா நம்பர்- 2 க்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு வானத்தைப் பார்த்து விரல்களை மடக்கி தேவதைகளை பார்த்து ஏதோ சொல்வார். தேவதைகள் என்னை தூக்கி வடக்குத் திசையிலுள்ள ‌சில கடவுளின் தூதர்களிடம் சென்றுவிடும். அங்தகே கடவுளை பார்த்து விட்டு மீண்டும் தெகிமாலா திரும்பி விடுவேன் என்று அடிக்கடி சொல்வார். தெகிமாலா மக்கள் இவரையே கடவுளாக நம்பி கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுத இல்லை.

இந்த தாத்தா நம்பர்-2 வின் மூத்த மகள் ஒரு பையனைக் காதலித்தாள். அந்த பையனும் ஒரு இள‌ம் கூத்து நடிகன். அந்த பையனுக்கும் ஒரு வினோத பழக்கம் இருந்தது. தாத்தா போல இல்லாமல் இவன் அடிக்கடி பூமியை பார்த்து விரல்களை காட்டுவான். பூமிக்குள் இருந்து பாதாள பைரவிகள் வ‌ந்து என்னை தூக்கிச் சென்று பாதாள உலக கடவுளிடம் அழைத்துப் போவார்கள் என்று பீலா விடுவான்.

இவனது பீலா தாத்தாவுக்கு பிடிக்காமல் போக அவர் தனது மகளை இன்னொரு தெருக்கூத்து பையனுக்குக் கட்டி வைத்தார். அவளும் தெரிஞ்ச நாயைக் காட்டிலும் தெரியாத பேய் மேல் என்று காதலை உதறி தாத்தா நம்பர்-2 பேச்சுக்கு கட்டுப்பட்டாள். இந்த நிஜக் கூத்தெல்லாம் தெகிமாலா நாட்டு மக்களுக்கு கொஞ்ச நாள் வரை கிளுகிளுப்பாக இருந்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கொஞ்ச நாள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.

நான் சொல்ல வந்தது இதுக இல்லை.

தாத்தா-2 க்கு உள்ளுக்குள் ஒரு ஆசை. அது தெகிமாலா நாட்டுக்கு ஓரே ஒரு நாள் ராஜாவாகி விட வேண்டும் என்பதுதான். ஆனா‌‌‌ல் அதை வெளியில் சொல்ல மாட்டார். கூத்துக்கலையில் மயங்கிய மக்களும் கேட்டுப் பார்த்து விட்டார்கள். உங்களுக்கு ராஜா ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள். கண்ட கண்ட ……... யெல்லாம் ராஜாவா இருக்காங்க. உங்கள ராஜாவாக்க மாட்டோமா?

தாத்தா நம்பர்-2 மக்களை பார்த்து சொன்னது இதுதான். வானத்து தேவதைகள், தூதர்கள் மனது வைத்தால் நான் ராஜாவாகி விடுவேன். எனக்கு ராஜா ஆசை இல்லை. ஒருவேளை நான் ராஜாவானால் அது நான் ராஜா ஆனதால் நடந்தது என்று அர்த்தம். இந்த அறிவிப்பை சொல்லி விட்டு அவர் ஒரு தெருக்கூத்து நடிக்க அகிமாலா நாட்டுக்கு சென்று விட்டார். தெகிமாலா மக்கள் மண்டையை பிச்சிக்கிட்டு அலைந்தார்கள்.

நான் சொல்ல வந்தது இது் இல்லை.

தெகிமாலா மக்கள் ஞாபக மறதிக்காரர்கள். தாத்தா அகிமாலாவிலிருந்து திரும்ப மூன்று வருடங்கள் ஆகும். மக்களுக்கு போரடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் தாத்தா நம்பர்-3 பரபரப்பாக பேசப்பட்டார்.

தாத்தா நம்பர்- 3

இந்த தாத்தா நம்பர்-3 கொஞ்சம் பவர்புல் மனிதர். எழுதவே பயமாக இருக்கிறது. இவர்தான் தெகிமாலா நாட்டு ராஜா. இவரைப் பற்றி நாம் பேசுவதற்கு முன் தெகிமாலா நாட்டில் ஒரு பாட்டியின் கதையை பார்த்து விடலாம். இந்த பாட்டி நிலவில் வடை சுட்டுக் கொண்டிருந்தபோது தெகிமாலா நாட்டு தெருக்கூத்து மேல் ஆர்வம் வந்து, கூத்துக்கட்டும் ஆசையில் எண்ணெய் சட்டியைக் கூட இறக்காமல் ஓடி வந்து விட எண்ணெய் சட்டி சூடேறி வெடித்து விட்டது. நிலவு முழுதும் கொழுந்து விட்டு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது நெருப்பு.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தாத்தா நம்பர்-3 பற்றி. ராஜாவாக இருந்தாலும் இவரும் தெருக் கூத்திலிருந்துதான் வந்தார். ஆரம்பத்தில் தெருக்கூத்தில் வசனம் எழுதி வந்தார். அந்த வசனம் பாட்டியின் அடுப்பை விட சூடாக இருந்தது. மக்கள் இதயத்தை சுட்டது. தெகிமாலா மக்கள் தாத்தா நம்பர்-3 ஐ ராஜாவாக்கி விட்டார்கள். தாத்தா நம்பர் 3 க்கும் நிலவு பாட்டிக்கும் ஒருபோதும் ஒத்து போவதில்லை, ஒரு விசயம் தவிர. அது தெகிமாலா மக்களை தங்கள் பேச்சால், சிந்தனையால் குழப்புவதை தவிர.

உதாரணம் தாத்தா நம்பர்3:- நீ என்ன நிலவிலிருந்து வந்த பாட்டியா? எனக்கு ஏட்டிக்கு போட்டியா?

நிலவு பாட்டி :- நான் நிலவிலிருந்து வந்தாலும் இந்த தெகிமாலா நாட்டில் பிறந்தவள்தான். வடை சுடுவதற்காக நிலவுக்கு சென்றேன். இப்ப என் சொந்த நாட்டுக்கு வந்து விட்டேன்.

தாத்தா நம்பர் 3:- நிலவுக்கு சென்ற அரசியே? அங்கிருந்து எடுத்து வருவாயோ தண்ணி நூறு டி.எம்.சியே.

நிலவு பாட்டி :- நான் ராணியானால் பற்றி எரியும் நிலவிலிருந்து நூறு என்ன நூறு கோடி டி.எம்.சி தண்ணீர் எடுத்து வருவேன். செய்வீர்களா

என்று மக்களை பார்த்துக் கேட்க தெகிமாலா மக்களும் அவரை ராணியாக்கி விட்டார்கள். ராணி செய்த முதல் வேலை. வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன். சிறிது காலம் சென்ற பிறகு ராணிப் பாட்டி சென்று மீண்டும் ராஜா தாத்தா அரியணையில் வந்து அமர்ந்தார். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

குட்டித்தீவு :-

தெகிமாலா நாட்டுக்கு தென்கிழக்கே ஒரு குட்டித் தீவு இருப்பதாக சொன்னேன் அல்லவா? அந்த குட்டித் தீவின் பெயர் இகிமாலா. இங்க எப்ப பார்த்தாலும் சண்டை. இங்க இருக்கற ராஜா ஒரு சாடிஸ்ட் தாத்தா. அவருக்கு தினமும் நூறு பறவைகள் (சொந்த நாட்டு பறவைகள்) ரத்தத்தை குடிக்கனும். சமீப காலமாக அவர் பறவை இனத்தையே அழித்து விட வேண்டும் என்று தீவிரமாக இறங்கியிருந்தார். ரத்த வெறி அதிகமாகி நூறு என்ற எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து விட்டது.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

Back To தெகிமாலா

ஒரு நாள் ராஜா தாத்தா நம்பர்-3 கடற்கரையில் வாக்கிங் செல்கிறார். அதிகாலை. மறைந்திராத நிலவை பார்க்கிறார். இது் வரை சூரியனையே பார்த்து வ‌ந்த அவர் முத‌ல் முறையாக நிலவை பார்க்கிறார். நிலா ரத்த சிவப்பாக இருக்கிறது. அய்யகோ… இதென்ன கொடுமை என்றறு வினவ உட‌ன் சென்றவர்கள் திகைக்கின்றனர். அவர்களுக்கு தெரியும் இதுன நிலவு பாட்டியின் அடுப்பு வெடித்து தீப்பற்றி எரியும் நிலாவென. ஆனா‌‌‌ல் அவர்கள் மாற்றிச் சொல்லி விடுகிறார்கள்.

இகிமாலா தீவில் தினமும் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிகின்றன. அவற்றின் ரத்தம் நிலவில் பட்டு தெறித்து நிலா சிவப்பாக மிளுங்குகிறது. அவதானித்தால் கடல் நீலம் இழந்து ரத்த நிற சோபையுடன் இருப்பதை பார்க்கலாம். (இந்த மிளுங்குகிறது-அவதானிப்பு இதெல்லாம் தெகிமாலா நாட்டு இலக்கிய மோஸ்தர்) மேலும் கடற்கரை முழுதும் செத்து ஒதுங்கிய பறவைகளின் உடல்கள்.

தாத்தா ராஜாவுக்கு தலை சுற்றுகிறது. அய்யகோ நிலவு ரத்தம். கலங்கியது என் சித்தம். தெளிந்தது உன்மத்தமென கால் நடுங்கி பீச்சில் சாப்பிடாமல் அமர்கிறார். காட்டுத்தீ போல் தெகிமாலா எங்கும் விசயம் பரவுகிறது. தாத்தா ராஜா ஆதரவாளர்கள் தெகிமாலா முழுதும் சாப்பிடாமல் அமர்கிறார்கள். வாக்கிங் வ‌ந்த மக்கள் திகைக்கிறார்கள். பன்னிரெண்டு மணிக்கு ராஜாவுக்கு பசி வருகிறது. அரண்மனைக்கு எழுந்து போய் விடுகிறார். சரி. அப்படினா‌‌‌ இகிமாலாத் தீவில் பறவைகளை கொல்வது நின்று விட்டதா என் று ‌நீ‌ங்க‌ள் கேட்கலாம். வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

மந்திரப்பொட்டிகள்

தெகிமாலா நாட்டு ராஜா தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். ஐந்து பிள்ளைகள். இருபது பேரக் குழந்தைகள். பேரக் குழந்தைகளில் ஒருவருக்கு ஒருநாள் ஒரு அதிசய மந்திர பொட்டிக் கிடைக்கிறது. இதைக் கொண்டு உலகின் ஏன் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் நடக்கும் விசயத்தையும் பார்க்க முடியும். இந்த மந்திர பொட்டியை மிக திறமையாக பயன்படுத்தினா‌‌‌ல் ஒருவனை மிக வல்லமை படைத்தவனாக மற்ற முடியும். அதே நேரம் இது மக்கள் கைக்கு கிடைத்தால்? அவர்களில் யாராவது வல்லமை பெற்று விட்டால். ஐயோ… நினைக்கவே பயமாக இருக்கிறது.

அப்போதுதான் பேரனுக்கு ஒரு ஐடியா வருகிறது. இந்த மந்திர பொட்டியை தயாரித்து தெகிமாலா மக்கள் எல்லாருக்கும் தந்து விடலாம். நம் நாட்டில் பிரபலமாக உள்ள தெருகூத்துக் கலையை மந்திர பொட்டியில் காட்டி விடலாம். மக்கள் அதில் மயங்கி மூழ்கி விடுவார்கள். ஐடியா ந‌ல்ல இருக்கிறதல்லவா? அந்தக் காலத்தில் இதற்குதான் ராஜ தந்திரம் என்ளறு பெயர். அன்று முதல் தெகிமாலா மக்கள் மந்திர பொட்டி முன்பு மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாக மயங்கி கிடந்தார்கள். மந்திர பொட்டிகளில் தேவதைகள் தோன்றி இளைஞர்களை வசியம் செய்தார்கள். சில தாத்தாக்கள் பேசியே மயக்கினார்கள். பகல் பொழுதுகளில் தேவதைகள் தலையை விரித்து போட்டுக் கொண்டு லிட்டர் லிட்டராக கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா இல்லத்தரசிகளும் அவர்களை கண்டு கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இந்த விசயம் நிலவு பாட்டிக்கு எட்டியது. நிலவு பாட்டி கைக்கும் சில மந்திர பொட்டிகள் சென்றது. அவற்றை வைத்து நிலவு பாட்டியும் தெகிமாலா மக்களை குழப்ப, தெகிமாலா மக்கள் ஒருக்கட்டத்தில் சுத்தமாக சிந்திக்கும் திறனை இழந்தார்கள். அவர்கள் தாத்தாக்கள், பாட்டிகள் சிந்தனையை மெல்ல உள் வாங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறினார்கள். ஒருக்கட்டத்தில் தெகிமாலா மக்கள் அனைவருமே தாத்தாக்கள், பாட்டிகளாக உருமாற்றம் அடைந்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுவும் இல்லை.

நான் சொல்ல வந்தது

தெகிமாலா நாட்டில் இந்த மூன்று தாத்தாக்கள் தவிர மேலும் பல தாத்தாக்கள் இருந்தனர். பத்து வேடம் கட்டிய ராஜ பார்ட் தெருக்கூத்து தாத்தா (தாத்தா-2 போல இவரும் பேசுவது யாருக்கும் புரியாது). பட்டிமன்ற தாத்தா (பேசும்போது தன் நிறத்தை தானே கிண்டல் செய்துக் கொள்வார்) முண்டாசுக் கட்டிய பெரிய ராஜா தாத்தா, லொள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா, புல்லுத் தாத்தா தேசமெங்கும் தாத்தாக்கள்தான். இத்தனை தாத்தாக்கள் இருந்தும் தெகிமாலா மக்களின் சமகால தலையெழுத்தை மாற்றியமைத்ததில் பெரும் பங்கும் பெருமையும் அந்த மூன்று தாத்தாக்களுக்கும், நிலவு பாட்டிக்கும்தான் சேரும்.

மந்திர பொட்டிகள் வழியாக இவர்கள் தெகிமாலா வீட்டுக்குள் அவர்களை அறியாமலேயே செ‌ன்று தெகிமாலா இளைஞர்களை தாத்தாக்களாகவும், இளைஞிகளை பாட்டிகளாகவும் மாற்றி விட்டார்கள். ஒரு வகையில் தெகிமாலா நாட்டில் எல்லோரும் தாத்தாக்களாகவும், பாட்டிகளாகவும் மாறிப்போனதும் நல்லதே. எப்படி என்லறு கேட்கிறீர்களா? முன்பு தெகிமாலா சிறுவர்கள் இப்படி பாடுவார்கள்.

தாத்தா தாத்தா தை
தாத்தா கையில நெய்
மோந்து பார்த்தால் ஆய்


இப்போது தேசமெங்கும் எல்லோருமே தாத்தாக்களாக மாறிப் போனதில் யாருமே தாத்தாக்களை கிண்டல் செய்வதில்லை. தேசமெங்கும் தாத்தாக்கள் என்ற பொது அடையாளம் ஒரு வகையில் சோஷியலிசமே. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுவும் இல்லை...

Monday, November 2, 2009

பார்த்ததில் ரசித்தது - நேற்று...இன்று

நேற்று















இன்று

முத‌ன் முதலாய்

முந்தைய போஸ்ட்டில் இருந்த காதல் கவிதைகள் கல்லூரி படிக்கையில் கிறுக்கியவை. இப்போதெல்லாம் ரொமான்ஸ் கவிதைகளுக்கு பதில் இ‌து போன்ற ஏடாகூட கவிதைகள்தான் வ‌ந்து விழுகின்றன.

முத‌ன் முதலாய்
---------------
நண்பனுடன் சென்றிருந்த
சந்து வீடொன்றில்
எப்படி ஆரம்பிப்பது
என்ன பேசுவதென்று தெரியவில்லை.
இதுதான் முத‌ல் முறை
எனக்கென்று ஆரம்பிக்க
எப்படியோ தொடங்கியது.
எல்லாம் முடிந்து திரும்புகையில்
அடு‌த்த முறை தொடங்க
என்ன பேசுவதென்று குழம்பியது.

Saturday, October 31, 2009

படித்ததில் பிடித்தது - மிஸ்டர் மாறார்

மிஸ்டர் மாறார்
திண்ணை.காமில் வந்த இந்த வார நக்கலொன்று. அடிக்கடி சூர்யாங்கறது யாரு என்று தளபதி பட சாருஹாசன் போல கேள்வி வரும். கீற்று.காமில் இவரது சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது.

Tuesday, October 27, 2009

இயற்கை







இயற்கை
-----------
இயற்கை‌யென்ற தலைப்பில்
சிறுமியொருத்தி வரைந்த ஓவியத்துக்கு
ஆறுதல் பரிசு கூட தரவில்லையாம்.
அழுதபடியே சொன்னாள்.
வாங்கி பார்த்தேன்.
வெள்ளைத்தாளில் பெ‌‌ரிய அளவில்
இரண்டு முக்கோணங்களை
அருகருகே வரைந்திருந்தாள்.
ஒரு அரைவட்டத்தால்
முக்கோணங்களை இணைத்திருந்தாள்.
பிறைநிலவாம்.
மலைகளின் அடியில்
நெளி நெளியாக கிறுக்கியிருந்தவள்
ஆறு வரைந்தேன் என்றாள்.
ஆர்வமாக உற்றுப்பார்த்தேன்.
ஆற்றின் மேலே
ஆனந்தமாய் நீந்தும் மீன்கள்.
ஆற்றோரம் தென்னை மரங்கள் கூட.
ஓடமொன்றை காண்பித்தாள்.
மீன்களுக்கு அடிபடாமல் இருக்க
ஓடத்தின் பாதிமுனை மலை மேல் இருந்தது.
ஓடம் எப்படி மலையேறும்?
இதைச்சொல்லி நிராகரித்தார்களாம்.
சிரித்தபடியே அவளிடம் தந்தேன்.
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும்போது
மலையேறினா‌‌‌ல் என்ன தப்பு?

இறைத்தூதுவன்

இறைத்தூதுவன்
——————————————
இரண்டு மாடிக்கடையில்
விற்பனை பிரதிநிதியென்று
அறிமுகப்படுத்திக் கொண்டவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
என் மீது நம்பிக்கை வரவில்லை போலும்.
வரிசையாக சொல்ல ஆரம்பித்தான்.
பாட்டு கேட்கலாம்.
படம் பார்க்கலாம்.
படம் பிடிக்கலாம்.
குறிப்பெழுதலாம்.
கடிகாரம் உண்டு.
காலண்டர் பார்க்கலாம்.
விளையாடலாம்.
புத்தகம் படிக்கலாம்.
ஓவியம் வரையலாம்.
கணக்குகள் செய்யலாம்.
கடவுளையும் வரவழைக்கலாம்…….
திகைத்துப்போய் நிமிர்ந்தேன்.
அவன் தலைக்கு பின்னால்
சிறு ஒளி வட்டம் இருந்தது.

Saturday, October 24, 2009

பளிச் கவிதை - 1 --- "அறை"

எனக்கு பிடித்த கவிஞர்கள்/சமீபத்தில் ரசித்த கவிதைகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

அறை
------
கலவியில் முந்திய விந்துக்கு
நடிக்கத் தெரியாத மனைவியை
உப்புக் கரையாத தோசைக்கு
அறைவேன்

அழகாய் இருக்கும் மாணவியை
அடிக்கடி அழ வைக்க கையெழுத்து
நல்ல காரணம்

முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு
அவளை நான் கடைசியாய் அறைந்தேன்
முத்தமிடும் வேட்கை மிக

முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை
முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும்
சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும்

பேரறிவாளன் நான்
நாடகங்களில் நீண்ட வசனம் பேசும்
ஷைலக்கின் பாத்திரம் எனதே
கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு
அனுமதி இலவசம் ஆண்டோனியோ

- நேசமித்ரன்

நன்றி: நேசமித்ரன் கவிதைகள்


காலங்காலமாக நமது குடும்ப அமைப்பின் மூடப்பட்ட அறைக்குள் நடக்கும் வக்கிரங்களை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வரிகள்

Friday, October 23, 2009

வாழ்த்துரை

வாழ்த்துரை
——----——–
மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல
மேடயேறிய தலைவர்
மெல்ல செருமியபடியே ஆரம்பித்தார்.
எதிர்கட்சியை வசைபாடியவர்
ஒ‌ன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்
எ‌ன்று நிறுத்தினா‌‌‌ர். நீண்ட பேச்சினூடே
மக்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேனென்று
வேறொன்றை சொன்னார்.
தொடர்ந்து பேசியவர்
இளைஞர்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
சமுதாயத்துக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
பத்திரிகையாளர்களுக்கு ஒ‌ன்று
எ‌ன்று நீட்டிக்கொண்டே சென்றார்.
மணமக்களுக்கென்று எதுவும்
சொல்லாமலேயே கிளம்பினார்.
அந்தவொன்று என்னவெ‌ன்றும்
இறுதிவரை சொல்லவில்லை.

Friday, October 16, 2009

"நண்பனின் காதலி" - திண்ணை.காம் கவிதை

இந்த வார திண்ணை.காமில் வெளியான எனது "நண்பனின் காதலி" கவிதை வாசிக்க...

நண்பனின் காதலி
----------------
பெண்விடுதலை பற்றி
அதிகம் பேசும் நண்பனொருவன்
தொலைபேசியில் வந்தான்.
தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக
தயங்கியபடி சொன்னான்.
ஆச்சர்யத்துடன் விசாரித்தேன்.
அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான்.
புதுமைப்பெண் என்றான்.
நிமிர்ந்த நன்னடையாம்.
நேர்கொண்ட பார்வையாம்.
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளாம்.
திமிர்ந்த ஞானச்செருக்கு கொண்டவளென்றான்.
உனக்கேற்ற செம்மை மாதர்தான்
சிரித்தபடி வாழ்த்தினேன்.
அசப்புல பார்க்க
அவள் மாதிரியே இருப்பாளென்று
சினிமா நடிகையொருத்தியின்
பெயரை குறிப்பிட்டான்.
கடைசியில் சொன்னதை
மீண்டும் அழுத்திச் சொன்னான்.



-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, October 13, 2009

கல் யானை & ராக்கெட் விளையாட்டு

கல் யானை
———————————
ஒற்றைக்கல் யானையருகே
கல்வி சுற்றுலாவுக்கு வந்த
குழந்தைகள் நின்றிருந்தனர்
வாய்பிளந்து பிரமித்தபடி.
துடுக்கு சிறுமியொருத்தி கேட்கிறாள்.
இது கரும்பு திங்குமா அங்கிள்?
புரியாமல் குழம்புகிறேன்.
யானையென்றால்
கரும்பு திங்க வேண்டுமென்பது
பொது விதியா?
கரும்புகூட திங்க தெரியாமல்
என்ன யானை இதுவென்று
நகர்கிறாள் திட்டியபடி.
மகேந்திரவர்ம காலத்து
மோசமான யானையொன்று
புராதன பெருமைகளை இழந்து
பரிதாபமாக பார்த்தது என்னை.

ராக்கெட் விளையாட்டு
————————————————————

ஐந்தாம் வகுப்பு
வனஜா டீச்சர் மேல்
ராக்கெட் விட்டதாக
சிறுகதையொன்றின் வரிகளை
வாசிக்க நேரிட்டது.
சிறுவயது பள்ளி நிழலாடியது.
கூடவே உள்ளுக்குள் சிறு குழப்பம்.
வனஜாவா? தனுஜாவாவென்று தெரியவில்லை.
காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்
சிறுபேப்பர் ஒன்றை மடித்து
பறக்கவிட்டேன்.
வனஜாவா? தனுஜாவா?
அடுக்களையிலிருந்து வந்த மனைவி
வினோதமாக பார்த்தபடி கேட்டாள்.
இதென்ன சின்னப்புள்ளையாட்டம்!?

Monday, October 12, 2009

சூடான செய்தி

சூடான செய்தி
-------------
விபச்சார வழக்கொன்றில்
கைது செய்யப்பட்ட
நடிகையின் புகைப்படத்தோடு
நாளிதழ் செய்தி போட்டிருந்தார்கள்.
அவள் சொன்னதாக
அடிப்பட்டன மேலும் ‌சில பெயர்கள்.
ஒரு இரவிற்கு ஒரு லட்சம்
வாங்குவதாக கூடுதல் தகவலையும்
கண்டுப்பிடித்து சொல்லியிருந்தார்கள்.
ஒரு லட்சம் நாளிதழ்கள் கூடுதலாய்
விற்று தீர்ந்தனவாம் அன்று.

Saturday, October 10, 2009

"நான்கு கவிதைகள்" - அகநாழிகை இதழ்

நண்பர் வாசு அவர்கள் அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கும் அகநாழிகை முத‌ல் இதழ் இன்று கிடைக்கப்பெற்றேன். இதழ் முழுக்க ஓரே கவிதை மழை(முப்பது கவிஞர்கள்).
முத‌ல் இதழில் எனது நான்கு கவிதைகள் வந்தது பெருமையாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் & நன்றி வாசு.



பூக்காரி
——––––
அதிகம் பேசப்படாத
மலைக்கோயிலொன்றிற்கு
நான் சென்றிருந்த நேரத்தில்
யாரையுமே காண முடியவில்லை.

கோயிலருகே ஒரேயொரு
பூக்கடை மட்டும் மேலே
ஏகாந்தமாய் நின்றிருந்தது.

நடுத்தர வயது பூக்காரியொருத்தி,
பக்கத்தில் வேடிக்கைப்பார்த்தபடி
ஆறுவயது சிறுவனொருவன்.
எங்களைத்தவிர யாருமில்லை.

சிரித்தபடியே கடந்துச்சென்றேன்.
கோயிலுக்குள்ளும் யாருமில்லை.
பூசை செய்யவும் ஆளில்லை.
ஏமாற்றமாய் திரும்பினேன்

என்ன விஷேசம் இந்தக்கோயிலில்
என்று விசாரித்தேன் பூக்காரியிடம்.
சண்டைப்போட்டு
சிவனைப்பிரிந்த பார்வதி கைக்குழந்தையுடன்
வந்தமர்ந்த மலையென்று
சலிப்பாக சொல்லியபடி
கோயிலுக்குள் நுழைந்தாள்.

என்ன சண்டையென்று
நான் கேட்கவுமில்லை.
அவள் சொல்லவுமில்லை.


தொலைந்தப் பறவை
——––––——––––——––––—
பெருநகரில் தொலைந்துப்போன
பறவையொன்றை
நான்கு வயது மகளுக்கு
விளக்க வேண்டியிருந்தது.

புத்தகத்தில் பறக்கும்
காட்டுப்பறவையை
விவரித்தேன்.

குரல் பதியப்பட்ட
ஒலிநாடா ஓடவிட்டேன்.

இந்த ஸ்பரிசம் போலென்று
கூண்டுக்கிளியை
தொட்டுக் காட்டினேன்.

மூன்றையும் ஒ‌ன்று சேர்த்து
காட்ட முடிந்ததேயில்லை.


தனிமையில் ஒரு நட்பு
——––––——––––——––––—
காலியாக வெறிச்சோடி
கிடந்த காலைப்பொழுதில்
ஒரு ரயில் நிலையத்தின்
தனித்து நின்ற
எடைபோடும் எந்திரத்தில்
ஏறி எடைப்போட்டேன்

வந்து விழுந்த அட்டையில்
எடையை பார்த்து
பின்புறம் திருப்ப
நண்பர்களிடம் பழகுமுன்
எடைபோடவும் என்று
அச்சாகியிருந்தது

சிநேகமாக சிரித்து
வைத்து நடந்தேன்


மீந்துப்போகும் சொற்கள்
——––––——––––——––––—
ஹைதராபாத் செல்லும்
ரயில் பயணமொன்றில்
என் சகபயணி கையில்
முப்பது நாளில் தெலுங்கு
கற்றுக்கொள்ளும் புத்தகம்
வைத்திருந்தார்.

பேச்சினூடாக தான்
ஐந்து நாட்கள் மட்டுமே
தங்கப்போவதாகவும் சொன்னார்.

விடைப்பெற்று இறங்கும்போது
மீந்துப்போகும் சொற்களை
என்ன செய்வார்
என்று யோசித்தேன்.


-நன்றி
என். விநாயக முருகன்

Friday, October 9, 2009

"இரண்டு கவிதைகள்" - "திண்ணை.காம்"

திண்ணை.காமில் வெளியான எனது இரண்டு கவிதைகளை வாசிக்க...

தொடரும்
---------
பல வருடங்களுக்கு
மேலாக ஓடிகொண்டிருக்கும்
மெகா சீரியலில்
இடையில் எத்தனையோ மாற்றங்கள்.
ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு
கல்யாணம் ஆனது.
மற்றொரு நடிகைக்கு
இரண்டு முறை கர்ப்பமாகி
இரண்டு குழந்தைகள் பிறந்தன.
அவருக்கு பதில் இவர்
இவளுக்கு பதில் அவளென்று
நூறு முறை மாற்றிவிட்டார்கள் பாத்திரங்களை.
இடையில் மூன்று முறை
வேறு வீடு வேறு அலுவலகம் மாறியிருந்தேன்.
இது தவிர ஒரு முறை
இறந்து மீண்டும்
பிறந்தும் தொலைத்து விட்டேன்.



பாரி
----
பு‌திதாக வ‌ந்திருந்த
போக்குவரத்துக்காவலர் பெயர் பாரியாம்.
செம கறாராம்.
சிக்னலொன்றில் காத்திருக்கையில்
பக்கத்து பயணி சொன்னார்.
பாரி துரத்திக்கொண்டு ஓடும்
சிறுமியின் கைகளிலிருந்து
சிதறியோடுகிறது பூக்கூடை.
காவல் வாகனத்தை
கடந்து அடுத்த தெரு சந்துக்குள்
மறைகிறாள் எஞ்சிய பூக்களுடன்.
இயலாமையின் வெறுப்பில்
சிதறும் பழங்கள்,
கண்ணாடி வளையல்கள்,
சில விசும்பல்களை
தாண்டி திரும்பும்
பாரியின் வாகனம் மீது
படர்ந்து கிடந்தன முல்லைப் பூக்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, October 7, 2009

"சாட்சி" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது சாட்சி என்ற கவிதை வாசிக்கலாம்

சாட்சி
------
விவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.


-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, October 6, 2009

முன் இருக்கையில்

முன் இருக்கையில்
------------------
முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை.
தலையில் இருந்து
உதிர்ந்தாலும்
தாங்க முடியும்.
கையிலிருந்து உதிர்கின்றன.
அரைகுறை இருட்டில்
வளையலோடு, சிரிப்பு சத்தமும்.
காலில் நசுங்குகின்றன
மல்லிகைப்பூ பாப்கார்ன்கள்.

Monday, October 5, 2009

"சின்னப்புள்ளத்தனமான கவிதைகள்" - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் முத‌ல் மூன்று கவிதைகளை வாசிக்கலாம்

ஆய பயன்
----------
வாழைமரத்தின் பயன் பற்றிய
கட்டுரையொன்றை
எழுதி வரச்சொன்னேன்
ஆறாம் வகுப்பு சிறுவனிடம்.
அவன் ஏதோ தப்பாக
புரிந்துக்கொண்டு
மாமரம் பற்றி
எழுதி எடுத்து வந்தான்.
திட்ட மனமில்லாமல்
மாம்பழமொன்றை பறித்து தின்று
மதிப்பெண் போட்டேன்.

ஒரு அதிசயம்
-------------
சற்றுமுன்பு
கேட்ட கேள்வியொன்றுக்கு
இம்மாம் பெருசு பூமியென்று
இரண்டு பிஞ்சு கைகளையும்
விரித்து பதில் சொன்னவள்
சென்றபிறகு
இம்மாம் பெருசு என்று
நானும் கைகளை விரித்தேன்
நான்கு அடி கூடுதலாக
பூமி விரிந்து சுற்றியது.


வாசிப்பு
-------
புதுப்புத்தகங்களை
வாங்கியவுடனேயே
வாசனைப் பிடித்து
எல்லா பக்கங்களின்
எழுத்துக்களையும்
எப்படியோ
உறிஞ்சி விடுகிறார்கள்.
குழந்தைகள் படிக்கவில்லையென
குறைச்சொல்ல
இனி என்ன இருக்கிறது?


ராட்சஸி
-------
இந்த குறும்புக்கார
சிறுமிக்கு
வாயெல்லாம் பொய்.
கொஞ்சம் அதிகம்தான்.
தன்னோடு விளையாட
வர மறுத்த நிலாவை
உடைத்துவிட்டதாக
வானத்தைக் காட்டினாள்.
சிரித்தபடி வீடு திரும்பி
ஜன்னல் வழியே
மேலே பார்த்தேன்.
ராட்சஸி கோபத்தில்
உடைத்தாலும் உடைத்திருப்பாள்.


தோழி
-----
நான் சென்ற
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்
நேரு வேடமிட்ட
குழந்தையிடம்
இந்திராகாந்தி வேடமிட்ட
குழந்தையைக் காட்டி
யாரென கேட்டார்கள்
பரிசு வழங்கிய நடுவர்கள்.
ஒன்றாம் வகுப்புத்தோழி
ஆர்த்தியென்று சொல்ல
எல்லாரும் சிரித்தார்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, October 2, 2009

"நீங்கள் கேட்டவை" - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் வெளியான எனது "நீங்கள் கேட்டவை" என்ற கவிதை வாசிக்க....

உயிரோசையில் இந்த கவிதையை வாசிக்கலாம்.

நீங்கள் கேட்டவை
----------------
கடற்கரைக்கு வந்திருந்த
புதுமண தம்பதிகளிடம்
தொலைக்காட்சி தொகுப்பாளினி
பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள்.
கடைசியாக பார்த்த படம் கேட்டாள்.
கணவருக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
மனைவிக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
கணவரிடம் பிடித்த நடிகையை கேட்டாள்.
மனைவியிடம் பிடித்த நடிகரை கேட்டாள்.
கணவருக்கும் , மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, October 1, 2009

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
-----------------



மாடு
—–––

சைக்கிளில் வ‌ந்த
மகன் கன்றுக்குட்டியை
இடித்துவிட்டதாக சொன்னபோது
கொஞ்சம் பதறித்தான் போனது.
அழைப்புமணியை கழற்றி
சற்று உயரத்தில் மாட்டலாமென்று
வாசல் வரும்போதுதான் கவனித்தேன்.
பெரியமாடு போஸ்டர் நக்கி கொண்டிருந்தது.



நாய் கண்காட்சி
——————————————

நாய் கண்காட்சியொன்றில்
வித விதமான நாய்களின்
அணிவகுப்பை பார்த்தேன்.
எட்டங்குல நாய் முதல்
எண்பது கிலோ நாய் வரை
வரிசையாக நின்றன.
ஒவ்வொரு நாயும்
விநோதமான ஆடைகளை
அணிந்திருந்தன.
சில நாய்கள் நகைகளும்
அணிந்து வாலாட்டின.
கறுப்பு கண்ணாடி
காலுறைகள் கூட போட்டிருந்தன.
என் நாய் நெருப்புத்தாண்டும்.
என் நாய் கடைக்குப்போகும்.
என் நாய் வேட்டையாடும்.
என் நாய் ஷேக்ஹேண்ட் தரும்.
பல பல குரல்களில்
அறிமுகம் செய்தார்கள்.
கண்காட்சி முழுவதும்
சுற்றிப் பார்த்துவிட்டேன்.
எந்த நாயும் நாய்போல
தெரியவில்லை.


யோகா டீச்சர்
————————————

பு‌திதாக சென்றிருந்த
யோகா வகுப்பொன்றில்
என் முன் அமர்ந்திருந்த
இளம்பெண் ஒருத்தி
மூச்சை நன்றாக
உள்ளிழுத்து வெளியே
விடும்படி சொன்னாள்.
செய்தும் காட்டினாள்.
அவள் செய்யும்போது
எனக்கு மூச்சே
நின்றுவிடும் போலிருந்தது.
மூச்சை இழுத்து சற்று
அப்படியே வைத்திருக்க சொன்னாள்.
சொல்லும்போது விட்டால் போதுமென்றாள்.
திடீரென செல்போன் ஒலிக்க
எழுந்து சென்றாள் பாதியில்.
அவள் செல்வதை பார்க்கையில்
மூச்சில் ஏதோ மாற்றம்.
தலை மறைந்ததும்
திணற ஆரம்பித்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.
மரணத்துக்கு சற்று முன்பு
திரும்பிவிட்டாள்.
ந‌ல்லவேளை…
போன மூச்சு வந்தது.

Saturday, September 26, 2009

"சிங்கம்" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது சிங்கம் என்ற கவிதை வாசிக்கலாம்

சிங்கம்
------
சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

நன்றி
என்.விநாயக முருகன்

Friday, September 25, 2009

பிறப்பு - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் வெளியான எனது பிறப்பு கவிதை வாசிக்க...

பிறப்பு
------
நண்பருக்கு
குழந்தை பிறந்திருப்பதையறிந்து
வாழ்த்துச்சொல்ல கிளம்பினேன்.
பனிக்காலையில் பூத்தமலர்
போல உறங்கிக்கொண்டிருந்த
குழந்தையை கொஞ்சநேரம்
ரசித்துவிட்டு நண்பருடன்
பேசிக்கொண்டிருந்தேன்.
நல்ல ஸ்கூல்
கிடைக்கவேண்டுமென்று
கவலைப்பட்டார் என்னிடம்.

-நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, September 24, 2009

ரயில் ‌விளையா‌ட்டு.. கோடுகள்.. மவுன விளையாட்டு - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் வெளியான எனது மூன்று கவிதைகளை வாசிக்க...


01.
ரயில் ‌விளையா‌ட்டு
----------------------------

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்.



02.
கோடுகள்
--------------
கையெழுத்து நேராக
வரவேண்டுமென்பதற்காக
கோடுப்போட்ட நோட்டு
ஒ‌ன்றை வாங்கி தந்தேன்
ஐந்து வயது‌ மகளுக்கு.
எப்படி முயற்சித்தும்
எவ்வளவு திட்டினா‌‌‌லும்
கோட்டுக்குள் அடங்க மறுத்து
வெளியே வெளியே
வ‌ந்து விழுந்தன எழுத்துக்கள்.
கோபத்தில் இரண்டு அடியும்
வைத்தேன். சற்றுக் கழித்து
கோடுபோடாத நோட்டொன்றில்
கிறுக்கியவள் எழுத்துக்களுக்கு
ஏற்றாற்போல அழகாக கோடுகள்
வரைந்து என்னிடம் நீட்டினா‌‌‌ள்.



03.
மவுன விளையாட்டு
-------------------------

வீட்டு விசேசமொன்றிற்கு
வ‌ந்த குழந்தைகள்
இங்கும் அங்குமாய்
ஆடி ஓடி கூச்சலிட்டு
துரத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டமாய் விளையாடினா‌‌‌ர்கள்.
யாரோ அதட்டினா‌‌‌ர்கள்.
சொன்னா ‌‌‌கேக்க மாட்டீங்க?
மவுனமாக விளையாடுங்க.
பிறகு குழந்தைகள்
மவுனத்தை கத்தியபடியே
அறையெங்கும் ஆடி ஓடி
அலைந்து சொன்னார்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, September 23, 2009

"பணமா? பாசமா? " - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் எனது இந்த கவிதை வாசிக்கலாம்...


பணமா? பாசமா?
———————————————
பட்டிமன்றமொன்றில்
பணமா…பாசமாவென்று பேச
பாசத்துடன் அழைத்தார்கள்.
பாசமென்ற தலைப்பில்
பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன்.
கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம்.
பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக
அணி மாற சொன்னார்கள்.
பாசத்தையெல்லாம் அடித்து
பணமென்று மாற்றிக்கொண்டிருந்தேன்.
சற்றுக்கழித்து வந்த தகவலில்
நடுவருக்கு வர இயலாமல் போனதாம்.
நடுவில் அமர சொன்னார்கள்.
பாசம் அடிக்கப்பட்ட பேப்பர்களில்
பணத்தை கழித்துவிட்டு
பொதுவான தீர்ப்பொன்று
சொல்லி திரும்பினேன்.

-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, September 22, 2009

தொடர் பதிவு -2

பா.ராஜாராம் அழைத்த தொடர் பதிவு இது...

- அன்பு - அனேகமாக ஒருவனை அடித்துவிட்டு அவனிடம் போதிப்பது

- ஆழி சூழ் உலகு - சமீபத்தில் படித்தது (பரிந்துரைத்தவர் ஜ்யோவ்ராம் சுந்தர்)

- இறைவன் - இ‌து வரை பார்த்ததில்லை. எங்க சிரிக்க வுடுறாங்க ஏழைகளை?

- ஈயென இரத்தல் இழிந்தன்று (இ‌து பிச்சை எடுப்பவர்களுக்கு சொன்னது)
அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று
(இ‌து பிச்சைக்காரர்களை உருவாக்கும் அரசாங்கத்துக்கு சொன்னது )

- உழைத்தால் பெரிய ஆளாக ஆகலாம் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம்.
உழைப்பை எப்படி புத்திசாலித்தனமாக மாற்றுகின்றீர்கள் என்பதில்தான் எல்லாம்
இருக்கிறது.

- ஊரை விட்டு ஓடி வ‌ந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகின்றது. சொந்த ஊர் ரொம்பவே மாறிவிட்டது.

- எனக்கு யாருமில்லை
நான் கூட
(நகுலன்)
இன்று வரை இந்த கவிதை எனக்கு மண்டை காய வைக்கின்றது. இதன்
உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் என்னோடு பகிரவும்.

- ஏமாற்றம் ஒன்றே ஏமாறாதது. அதனால் ஏமாற்றுவதில்
தப்பில்லை.காசு வாங்கிட்டு தாராளமாக மாற்றி ஓட்டுப் போடலாம்.தப்பில்லை.

- சட்டென எதுவும் நினைவுக்கு வரவில்லை. கவிஞர் ஐராவதம்
பிறகு ஐஸ்வர்யாராய்..ம்ம்ம் யோசிக்கனும்.

- 'ஒ'ரு கவிதை சொல்லலாமா?

காந்தள் மென்விரல்
கடிந்தாள் எஸ்.எம்.எஸில்
சாயங்காலம் வர்றப்ப
சக்தி புளிமிக்ஸ் வாங்கிட்டு வாங்க.
கூடவே வாரணம் ஆயிரம்
பால்கனி டிக்கட் இரண்டு.
ஓ.கே செல்லம் பதிலில்
சிவந்தாள் என் மகள்.

- ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். (தீவிர வாசிப்பு பழக்கம்)

ஒள - ஒளவையார் வேடம் போட்டு ஒரு பாடலின் (மகாநடிகன்) ஆரம்பக்காட்சியில்
மும்தாஜ் வருவார். எனக்கு ஒளவையார் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

- ஆயுத எழுத்து. தமிழில் இது வழக்கொழிந்து விட்டது. யாரும் இப்போது இந்த எழுத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. வளர்ந்த நாடுகள் கவனிக்குமா?



A - Available/single? Married (Unfortunately)
I can available (Just said for speaking)

B - BF -Best Friend - Books

C - Cat - Why most of the poets like and use "Cat" in their Poem?
(Another Name of Cat is Pussy)

D - Date of Birth ( 14-06- Year Vendam)

E - Essential Item?
We have Two Essential items in our body .
One is tongue.Another? Guess.....
Use both of them carefully .


F - Franz kafka's "Metamorphosis" (I have read recently)


G - Germany (I have visited one and only country)

H - Humour - Without this what is in Life?


J - Joke?
What is the difference between viagra & niagara
Niagara - Falls
Viagra - Never Falls

K - Kumbakonam (My Birth Place)

L - Life is Nonsense


N - I like N (Nayanthara & Namitha)
(Ofcourse i am Non-veg)



P - Phobias/Fears? Girls,God and Gold


Q - Questions - Always easy to ask. But tough to ask brillinat questions.


S - Smoke Often (Not a chain Smoker)

T - Thenkachi KO.Swamintahan - May his soul Rest In Peace





ஞ்சரைக்குள்ள வண்டி படத்துக்கு
றுமணி டிக்கட் எடுத்த நண்பன்
ன்று இப்படம் கடைசி
கா தியேட்டருக்கு
டனே வரவுமென்று
ருக்கே கேட்கும்படி போனில் கத்தினா‌‌‌ன்.
ண்ணூரிலிருந்து விரைந்தவனுக்கு
மாற்றமாய் போனது.
ந்தாவது ரீலில் பிட்டு சரியில்லையாம்.
யுத எழுத்துக்கு டிக்கட் எடுத்தானாம்.
ங்கி விட்ட அறையில்
டதம் போடும்படி நேர்ந்தது
ஆயுத எழுத்தைத்தான் பார்க்கமுடியவில்லை
இறுதிவரைக்கும்......


இந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது மண்குதிரை, அனுஜன்யா, ஜ்யோவ்ராம் சுந்தர்...

Monday, September 21, 2009

"பூங்குழலி" - "பூ நடிகை" - உயிரோசை கவிதைகள்

இந்த வார உயிரோசை மின்னிதழில் எனது இரண்டு கவிதைகளை வாசிக்கலாம். கவிதைகளை வெளியிட்ட உயிரோசைக்கு நன்றி.


பூங்குழலி
--------

மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
தொடங்கினா‌‌‌ள்.
தேனருவியின் வேகம் குறைந்தது.
அம்மம்மா தம்பி என்று நம்பி…
அடுத்த பாடல் பைசா பெறவில்லை.
பூங்குழலி அசரவில்லை.
மூன்றாவது பாடல் பாடினாள்.
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம்போக…
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே…
வரிசையாகப் பாடினா‌‌‌ள்.
திடீரென நிறுத்தினா‌‌‌ள்.
இரண்டு நிமிடம் கனத்த மெளனம்.
பாட்டு தீர்ந்துவிட்டதா?
பதறிப்போனது எனக்கு .
சற்று நேரம் தயக்கம் அவளிடம்.
என்ன நினைத்தாளோ?
பூங்குழலி உற்சாகமாய்ப் பாடினாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்.
நல்லவேளை…யாரும் கவனிக்கவில்லை.


பூ நடிகை
---------
பூ நடிகைக்கும்,
நான்கெழுத்து தெலுங்கு நடிகருக்கும்
ரகசிய திருமணம் திருப்பதியிலென்று
செய்தி போட்டிருந்தார்கள்.
நானும் எனக்குத் தெரிந்த
பூவையெல்லாம் நினைவில் பொருத்திப் பார்த்தேன்.
மல்லிகை, சாமந்தி , குண்டுமல்லி
கனகாம்பரம், பிச்சி, செம்பருத்தி.
எதுவும் பொருந்தவில்லை.
அடுத்த நாள்
பூ நடிகை விவாகரத்து
எ‌ன்று செய்தி வந்தது.
பூவைக் கண்டுப்பிடித்துவிட்டேன்.
எந்த நடிகையென்றுதான்
தெரியவில்லை.
கடைசியில்
ஏதொவொரு நடிகையின் தலையில்
எனக்குப் பிடித்த பூவொன்றை சூட்டிவிட்டேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, September 20, 2009

பசங்க

பசங்க
-----


மவுன விளையாட்டு
———————————————————

வீட்டு விசேசமொன்றிற்கு
வ‌ந்த குழந்தைகள்
இங்கும் அங்குமாய்
ஆடி ஓடி கூச்சலிட்டு
துரத்திக்கொண்டு
ஆர்ப்பாட்டமாய்
விளையாடினா‌‌‌ர்கள்.
யாரோ அதட்டினா‌‌‌ர்கள்.
சொன்னா ‌‌‌கேக்க மாட்டீங்க?
மவுனமாக விளையாடுங்க.
பிறகு குழந்தைகள்
ஒவ்வொரு அறையாக
மவுனத்தை ஆடி ஓடி
பிரச்சாரம் செய்தார்கள்.


எதிர்வீட்டு கிருஷ்ணஜெயந்தி
——————————————————————————
புதிதாக குடிவந்த
எதிர்வீட்டு வாசலிலிருந்து
உள்நோக்கி சின்ன சின்ன
பாதச்சுவடுகளும்
பால்கோலமும்
கோணலும் மாணலுமாய்
கிறுக்கியபடி போயிருந்தது.
கிருஷ்ணஜெயந்தி அலங்காரமொன்றை
மனைவியிடம் குறைச்சொல்கையில்
உள்ளிருந்து வந்த
அழகான குழந்தைக்கு
காலொன்று வளைந்திருந்தது.


கவிதையெழுதி
——————————————
என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.
பிரசுரமாகாத கவிதையொன்றை.
இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று.

கவலை

கவலை
———————
கல்லிருந்தால்
நாயைக் காணோம்.
நாயிருந்தால்
கல்லைக் காணோம்
எ‌ன்று அடிக்கடி புலம்புவான்
எ‌ன் நண்பன்.
நேற்று
கல்லுமிருந்ததாம்,நாயுமிருந்ததாம்.
அந்த தகவலைச் சொல்ல
நான் பக்கத்திலில்லையாம்.

Saturday, September 19, 2009

"கேள்விகள்" - சொல்வனம் கவிதை

இந்த வார சொல்வனம் மின்னிதழில் வெளியான "கேள்விகள்" கவிதை வாசிக்க...
கவிதை வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவினற்கு எனது நன்றி...

கேள்விகள்
----------
நண்பனொருவனை
நீண்ட நாட்கள் பிறகு
சந்திக்க நேரிட்டது.
எப்ப கல்யாணம்?
எங்க கல்யாணம் நடந்துச்சு?
காதல் திருமணமா?
ஏன்டா பத்திரிக்கை அனுப்பல?
பொண்ணு எந்த ஊரு?
வேலைக்கு போறாங்களா?
எத்தன புள்ளங்க?
பல கேள்விகள்,
பல பதில்கள்,
பல விசாரிப்புகள்.
இனி
கேட்பதற்கு எந்த
கேள்விகளும் இல்லாமல்
சந்தோசமாக உணர்ந்து
விடைபெறுகையில்
விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக
தயங்கியபடியே சொன்னான்.


-நன்றி
என்.விநாயகமுருகன்

Monday, September 14, 2009

"விடுமுறை நாள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் எனது ‌சில கவிதைகளை வாசிக்கலாம்.
இந்த கவிதைகளை வெளியிட்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு எனது நன்றி...





விடுமுறை நாள்
-----------------
ஞாயிறு காலை ஆறு மணிக்கு
பாட்டிக்கு நெஞ்சுவலி.
படுக்கையிலேயே
உயிர் போனதாக
தொலைபேசித் தகவல் வந்தது.

அசோக்நகர் எனக்கு
பக்கம்தான்.
அண்ணனுக்கு கே.கே.நகர்.
அக்கா வீடு வளசரவாக்கம்.
அக்கா வரும்போதே
பெசண்ட் நகர் மின்சார
சுடுகாட்டுக்குத் தகவல்
சொல்லிவிட்டதாகத் தெரிவித்தாள்.
கறுப்புநிற அமரர் ஊர்திக்கு
பேரம் பேசி கூடவே
அழைத்து வந்திருந்தான்
அண்ணன்.

பத்து மணிக்குள்
மாமா கொண்டு வந்த
மலர்கள், பன்னீர் பாட்டில்கள்
கண்ணாடிப்பெட்டி எ‌ன்று
மாறி இருந்தது வரவேற்பறை.
ஓரளவு தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.

மூன்று மணிக்கு
மெயின்ரோட்டைச் சுற்றி
அவரவர் வாகனத்துடன்
கிளம்பினோம்.
மின்சார சுடுகாட்டில்
மிச்சமான சாம்பலை
கேரிஃபேக்கொன்றில்
கவனமாகச் சுற்றிக்
கொடுத்தார்கள்.
கூடவே அவசியம் தேவையென்று
மரணச்சான்றிதழ் தந்தார்கள்.

இதெல்லாம்
பத்துமணி நேரத்தில் முடிந்தது.
அடுத்தநாள் திங்கட்கிழமை.
அலுவலக தினம்.
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி.


இரண்டு மின்விசிறிகள்
------------------------
1.
ஒரு இறக்கையை
இன்னொரு இறக்கை
துரத்த அதை இன்னொன்று
துரத்தவென்று
முடிவிலியாய் நீள்கிறது
மின்விசிறி கீழே
தனிமையின் நினைவுகள்.

2.
அறைக்குள் நுழைந்தவுடனேயே
ஆண்டுகள் கடந்த
மனைவியின் சலிப்பு போல
முத‌லில் கொஞ்சம்
சலித்து முனகி பிறகு
வழக்கம்போல கடமையாக
சுழல ஆரம்பித்தது.


மகளிர் மட்டும்
---------------
தெருமுனை
மருந்துக்கடையில்
பு‌திதாக வேலைக்கு
வந்திருந்தாள்
இளம்பெண்ணொருத்தி.
அப்போதுதான் கவனித்தேன்.
அதுவரை இல்லாத
குழப்பமும் தயக்கமும்
குடிவந்தது.
ஆணுறை பாக்கெட்
வாங்கச் சென்றவன்
தேவைப்படாத
தலைவலி மாத்திரையொன்றை
வாங்கிக்கொண்டு
அடுத்த தெரு மருந்துக்கடைக்கு
நகர்ந்தேன்.
இடையில் ஒருத்தி
அடுத்த தெருவிலிருந்து
இந்தக்கடை நோக்கி வந்தாள்.
இதுவரை இல்லாத
அன்னியோன்னியமாய்
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
என்னவென்றுதான் தெரியவில்லை.




-நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, September 13, 2009

"சிறுமழை" - நவீன விருட்சம் கவிதை

சிறுமழை
----------
முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.

(நன்றி: நவீன விருட்சம்)

Saturday, September 5, 2009

கைப்பழக்கம்

கைப்பழக்கம்
-------------
நகரின் பிரபலமான
சித்த மருத்துவரை
ஒரு நேர்காணலுக்காக
சந்திக்க நேரிட்டது.
சொப்பன ஸ்கலிதம்,
கைகால் நடுக்கம்,
ஞாபக மறதி, உடல் அசதி
பற்றி விவரித்தார்.
வாலிப வயோதிக அன்பர்களை
அன்பாக கடிந்தவர் ‌சில
அறிவுரைகள் சொன்னார்.
பேட்டி முடிந்து பேசினோம்
பொதுவான ‌சில விஷயங்கள்
முன்னப் போல
யாரும் வருவதில்லையென்று
குறைப்பட்டார்.
ஆறும் பெண் குழந்தைகள்
கரையேத்தனுமில்ல
கவலைப்பட்டார்.
ஆறா...? சற்று வியப்புடனே கேட்டேன்.
என்ன இருக்கு நம்ம கையில
எல்லாம் கடவுள் கொடுத்தாரென்று
மேலே கைகாட்டினா‌‌‌ர்.

Friday, September 4, 2009

"அலையும் ஆவியொன்று" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் வெளியான எனது "அலையும் ஆவியொன்று" கவிதையை வாசிக்க...
(நன்றி திரு. அழகியசிங்கர் அவர்களுக்கு)

அலையும் ஆவியொன்று
--------------------------------

என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்
உடைந்துப்போன சிலேட் குச்சிகள்,
பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன்
தகர சிலேட்டொன்று,
புழுக்கையாகிப்போன ‌
கலர் பென்சில்கள்,
பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு,
இவற்றோடு ஒரு சிறுவயது
ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது.
நான் எப்போது
பெட்டியை திறந்தாலும்
உயிர்கொள்ளத் துடிக்கும்
அந்த ஆவி என் உடலின்
நீள அகல பருமன்களை
கண்டு திகைத்து மீண்டும்
பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது.


-நன்றி
என்.விநாயக முருகன்

"திருமணமொன்றில்" - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் வெளிவந்த எனது "திருமணமொன்றில்" கவிதை வாசிக்க...

திருமணமொன்றில்
——————————————————
நான் சென்ற
திருமணமொன்றில்
மண்டப வாசலில்
அழகான நீண்ட
கூந்தலுடன்
இரண்டு கைகளை கூப்பி
தலையை லேசாக குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது.
பக்கத்தில்
பன்னீர் தெளிக்கும்
ஆண் உருவமும்
மின்சார பொம்மையென்று
யாரோ சொன்னார்கள்.
அட்சதை போடுமுன்
ஏனோ மேடையை
ஒருமுறை
உற்றுப் பார்த்தேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

நண்பரொருவரின் வீட்டில்

நண்பரொருவரின் வீட்டில்
———————————————————————

நண்பரொருவரின் வீட்டுக்கு
நீண்ட நாட்கள் பிறகு
செல்ல நேரிட்டது.
முன்புற வாசலில்
கன்றுக்குட்டி உயரத்தில்
நாயொன்று பயமுறுத்தியது.
சிரித்தபடியே அறிமுகப்படுத்திய
நண்பர் ஷேக்ஹேண்ட்
தரச் சொன்னார்.

புரோட்டின் கலந்த உணவு
மாத இறுதியில்
மருத்துவ சோதனை கூட
தடுப்பூசி போடுவதாக சொன்னார்.
நகங்களை சீராக
வெட்டிவிட வேண்டுமாம்.

ஜவ்வுகளை திங்காது.
துண்டுக்கறித்தான் உகந்தது.
கோழித் தொடையை
கிழிக்கத் தெரியாது.
பிய்த்து துண்டாக்கி
போட வேண்டுமாம்.

எலும்புகளை பச்சையாக
போடக்கூடாதாம்.
குக்கரில் வேகவைத்து
கொஞ்சம் மசித்து
கொடுக்க வேண்டுமாம்.

எல்லாம் சரி,
நாயின் பெயரென்ன?
நண்பரிடம் கேட்டேன்.
என்னை முறைத்தபடியே தொடர்ந்தார்.
நாயென்று சொல்லக்கூடாதாம்.
சரிதான்.

Wednesday, September 2, 2009

பாரதி நகர்

பாரதி நகர்
——————————
ஊருக்கு வெளியே
நாற்பது கிலோமீட்டர் தள்ளி
நெடுஞ்சாலை கிளைபிரிக்கும்
அத்துவானக் காட்டில்
காலிமனைகளை
காண்பித்தான்.
பத்தடியில் சுவையான குடிநீர்
இரண்டு கிலோமீட்டரில்
பள்ளிக்கூடம் மற்றும்
பொறியியல் கல்லூரிகள்
கூப்பிடு தூரத்தில் மருத்துவமனை
உடனே வீடுக்கட்ட
உகந்தது என்றான்.
காலிமனை சுற்றியிருந்த
நிறைய தென்னைமரங்களை,
கத்தும் குயில்களை
காட்டினா‌‌‌ன்.
மஞ்சள் பெயர்ப்பலகை காட்டி
தன் பெயரும் பாரதிதானென்றான்.
அப்படியே
உங்க சொந்தத்தில
ஏதாவது பத்தினிப் பெண்ணிருந்தா
சொல்லுங்கவென்று
வந்தது வாய்வரை.



பொய்
—————
பொய் சொன்னால்
சாமி கண்ணைக் குத்துமென்று
சொன்னேன்
சிறுமி ஒருத்தியிடம்.
வாயைத்தானே…?
சந்தேகமாக கேட்டாள்.

"தொலைந்துப் போனவைகள்" - கீற்று.காம் கவிதை

கீற்று.காமில் வெளியான எனது "தொலைந்துப் போனவைகள்" கவிதைகளை வாசிக்க...

தொலைந்துப் போனவைகள்
----------------------------
1

தொலைந்துப்போன பொருளை
கண்டுபிடிக்கவும்
கவ்வி இழுக்கவும்
பழக்கப்பட்டிருந்த
மோப்ப நாயொன்று
முன்பு எப்போதோ
தாயைக்கூட தொலைத்திருந்தது.

2

பேருந்தின் படிக்கட்டில்
தொங்கிச் சென்றவன்
நழுவவிட்ட செருப்பொன்று
சாலையில் கிடந்தது
அநாதையாக அடிப்பட்டபடி.
எப்படி வலிக்குமோ
எங்கோ கிடக்கும்
இன்னொரு செருப்புக்கு

3

தொலைந்துப்போன
பழைய நண்பனொருவனை
நீண்ட நாட்கள் கழித்து
பார்க்க நேரிட்டது.
அவன்
பு‌திதாய் சேர்ந்த வேலை
பு‌திதாய் வாங்கிய கார்
பு‌திய மாடல் மொபைல்
பு‌திதாய் கட்டும் வீடு
சமீபத்தில் செ‌ன்றுவ‌ந்த
நாட்டைப்பற்றிய பு‌திய தகவல்கள்
இவற்றோடு எனக்கு
பு‌திய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்



நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, September 1, 2009

பறவை நிபுணர்

பறவை நிபுணர்
——————————————

பறவைகளை பற்றிய
கவிதைகளுக்காக
பறவைகளை தேடி
சதுப்புக்காடுகளில்
அலைந்த ஒருநாளில்
நிபுணரொருவனை
சந்திக்க நேரிட்டது.

பறவைகள் பற்றி
பல தகவல்களை
சொன்னா‌‌‌ன்
சலீம்அலி பற்றி
நிறைய பேசினா‌‌‌ன்

அரிவாள் மூக்கன்
அபூர்வமாய் வருகிறதாய்
சொன்னா‌‌‌ன்

கூழைக்கடா
கூடுக்கட்டுவதை சிலாகித்து
சொன்னா‌‌‌ன்

நீண்டநாள் சந்தேகமான
நெற்குருவிக்கு இன்னொரு பெயர்
வானம்பாடியென்பதை
உறுதி செய்தான்

பெயிண்டட்ஸ்டாக் அல்லது வண்ணநாரை
ஸ்னேக்பேர்ட் அல்லது பாம்புத்தாரா
ஸ்பூன்பில் அல்லது துடுப்புவாயன்
விசிலிங்டக் அல்லது மரத்தாரா
பெயர்களை அடுக்கியபடியே நடந்தான்

சற்றுமுன் பார்த்த
செனகல் கிளிகள்
ஆப்பிரிக்காவிலிருந்து
வருடம் தவறாமல்
வருவதாக சொன்னான்

முன்னி வௌவால்
முக்குளிப்பான் கூட
நாமக்கோழி
நீர்க்கோழிப்பற்றியும் விவரித்தான்

இறுதியாக
புறாக்கறி லேசாக தித்திக்கும்
என்ற தகவலையும்
சொன்னா‌‌‌ன்