Saturday, May 30, 2009

ஒரு கிராமிய விளையாட்டு - உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளியான எனது "ஒரு கிராமிய விளையாட்டு" கவிதையை வாசிக்க...

ஒரு கிராமிய விளையாட்டு
இடது கையால்
பம்பரம் பிடித்து
வலது கையால்
வேகமாகக் கயிறு
சுற்றுகிறான்.
பாவு நூலின்
இடையே
ஊடு நூலை
தறியில் அடிக்கும்
தேர்ந்த நெசவாளியின்
லாவகமென.
இடையிடையே
அப்பீ‌ஸ் சத்தம்.
தாமதித்து அப்பீ‌ஸ்
சொன்னவன்
முதுகில் விழுகிறது
ஆக்கர் கரும்புள்ளி.
கரும்புள்ளி சிறுவன்
மீண்டும் சுழற்றுகிறான்
மவுஸை.
தோல்வியை மாற்றியெழுத.
மாற்றப்பட்ட விதி
திரையில் விரிகிறது



நன்றி...!

-என்.விநாயக முருகன்

No comments:

Post a Comment