Friday, November 13, 2009

நகல் செய்தல்

ஜ்யோவ்ராம் சுந்தர் தளத்தில் ஒரு கவிதை படித்தேன். சிலநாட்கள் முன்பு இதேபோல ஒரு கவிதை எழுதி உயிரோசைக்கு அனுப்பி வைத்தேன். ஏனோ அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். எனக்கும் அவ்வளவாக திருப்தி இ‌ல்லை. பெட்டிக்குள் இருந்து மீண்டும் எடுத்து படித்தேன். இதே போன்ற ஒரு பார்வை சுந்தருக்கும் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைக்காட்சி அபத்தங்களை கொஞ்சம் அவதானித்தால் போதும். இத‌ன் வக்கிரம் பிடிபடும்


நகல் செய்தல்
---------------
மனைவியுடன் கூடும்போதும்
பாடாய்படுத்துகிறது
சற்றுமுன் டி.வி யில்
பார்த்த நடன பெண்களின்
மார்புகளும் இடுப்புகளும்
எந்த நடிகரின் அல்லது
எந்த நடிகையின் ஜாடையில்
பிறந்து தொலைக்கப்போகிறதோ
இன்று நிகழும்
ஜனன முயற்சியின் முடிவில்

6 comments:

  1. இது நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  2. முடிவிலா? தொடக்கமா.. just lol man

    Nice kavithai

    ReplyDelete
  3. இயக்குநர் திரு பாலசந்தர் அவர்களின் சிந்து பைரவி படத்தினைப் பாருங்கள்.
    'மோகம் எனும் தீயின்..' பாடலுக்கு முன்னால் வரும் கூடலை கவனியுங்கள்!
    இருபது வருடத்திற்கு முன்பே எடுத்துவிட்டாரய்யா!

    மேற்கொள் காட்டத்தானே தவிர, வேறொன்றுமில்லை!
    மற்றபடி கவிதை நல்லாருந்திச்சி!

    -கேயார்

    ReplyDelete
  4. ஆமாங்க...... இன்றைய நாள் பொழுதில் நீங்க சொல்வது போல் நடக்கிறது. மனைவி மேல் உள்ள காதல் போய்..... நடிகைகள் மேல் உள்ள காமத்தினால் தான் பெரும்பாலும் பலர் உடல் உறவு வைத்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
  5. நன்றி நந்தா
    நன்றி அசோக்
    நன்றி கேயார்
    நன்றி டம்பி மேவீ

    ReplyDelete