Friday, March 5, 2010

நான் கடவுள்

நான் கடவுள்
------------

தேநீர்க்கடையில் சந்தித்தவர்
நான் கடவுள் என்றார்
அப்ப நான்?
நீயும் கடவுள் என்றார்
அவன்?
அவள் இவன்
அனைவரும் கடவுள் என்றார்
கடவுளை சந்தித்ததில்
கடவுளுக்கு பரம திருப்தி

தேநீர் குடித்த காசுக்கு
கடன் சொல்லும்போது மட்டும்
ஒரு பொல்லாத கடவுள்
இன்னொரு கடவுள் முகத்தில்
சுடுதண்ணிய ஊத்திடுவேன் என்றார்

5 comments:

  1. சொல்லவேயில்ல... நானும் கடவுள்தான்ப்பா.. சொன்னா யாரும் நம்பமாட்டேன்றாங்க :(

    ReplyDelete
  2. பணக்கார கடவுளுக்குத் தான் பக்தர்கள் அதிகம்.. கவிதை அருமை

    ReplyDelete
  3. நன்றி அசோக்
    நன்றி பா.ரா
    நன்றி திகழ்
    நன்றி உழவன்
    நன்றி பிரியா

    ReplyDelete