ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்
ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்
ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி
ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது
Monday, December 19, 2011
Saturday, November 26, 2011
ஒரு மழை
ஒரு மழை
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது
ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது
ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது
ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது
ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது
ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது
ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது
ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது
ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது
நன்றி
என்.விநாயக முருகன்
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது
ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது
ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது
ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது
ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது
ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது
ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது
ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது
ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது
ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது
நன்றி
என்.விநாயக முருகன்
Labels:
Kavithai,
Literature,
Poetry,
Tamil,
Tamil-Poem
Wednesday, November 16, 2011
புயலுடன் உரையாடுபவன்
பண்டிகை நாளொன்றின்
முந்தைய இரவில்
வானிலை ஆராய்ச்சி மையத்தில்
தனியாக அமர்ந்துள்ளான் அவன்
வெளியே எங்கோ
தொலைதூர அதிர்வேட்டுகளும்
வானவெடிகளின் கொண்டாட்டங்களும்
சன்னமாய் ஒலிக்கின்றன
அவன் அமர்ந்திருக்கும்
கட்டுப்பாட்டு அறையில்
கழுவப்படாத
காலி தேநீர்க்கோப்பைகளும்
எரிந்துப்போன சிகரெட் துண்டுகளும்
மல்லிகைப்பூக்களின் வாசமும்
சிதறி கிடக்கின்றன
அமைதியாக தலையை
கவிழ்ந்திருக்கும் அவன்
சலிப்பாக
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
அவனது இருப்பிடத்திலிருந்து
ஐநூறு கிலோமீட்டர் தள்ளி
புயல் சின்னம் நகர்கிறது
சலிப்புற்றிருந்த அவன் முகம்
இப்போது
காதல் கடிதம் கிடைக்கப் பெற்ற
பதின்ம பெண்ணாய் மாறுகிறது
அந்த அறையில் பரபரப்பு
சூல் கொள்கிறது
அவன்
கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்
கருவிகளின் திசையை மாற்றுகிறான்
கணக்கீடுகளை மீண்டும் சரிபார்க்கிறான்
இதுவரை சந்தித்திராத புதிய புயல்
இதுவென்று அவனுக்கு படுகிறது
வெள்ளைத்தாளில் எதையோ
கிறுக்குகிறான்
தொடர்பு துண்டிக்கப்பட்ட யாருக்கோ
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான்
சில மின்னஞ்சல்களை அனுப்புகிறான்
அவன்
புயலின் மையத்தை
புயலின் உருவத்தை
உன்னிப்பாக உற்றுப் பார்க்கிறான்
சிறுவயதில்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
பால்ய காலத்தோழனின் முகம்
அவனுக்கு நினைவுக்கு வருகிறது
சாட்டிலைட் சமிஞ்கைகளை
கவனமாக ஒலிப்பெயர்க்கிறான்
புயல் வடமேற்கு திசையில் நகர்கிறது
அவனது திசையும் அதுவே
அவன் ஆர்வமாக பார்க்கிறான்
தேநீர் குடித்தபடி
புயலை பார்த்து ரசிக்கின்றான்
நேரம் செல்ல செல்ல
புயலின் வேகம் அதிகரிக்கிறது
அவன்
புயலுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டுகிறான்
புயலின் மையம் சற்று விரிகிறது
அவன் இப்போது
புயலுடன் உரையாட தொடங்குகின்றான்
புயலுக்கும் அவனுக்கும்
இடையிலிருக்கும் பிணைப்பு
அந்தரங்கமானது
புதிரானது
சுவாரசியமானது
அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்ளும்
மொழி மற்றவர்கள் அறியாதது
சங்கேத குறியீடுகளால் நிறைந்தது
அவர்கள் உரையாடல்கள்
காதல் நிறைந்தது
நீண்ட உரையாடலின் முடிவில்
புயலின் மையம் சிறிது சிறிதாக சுருங்குகிறது
அது மெல்ல மெல்ல உருமாறுகிறது
புயலின் திடீர் செய்கை
புரியாமல் அவன் திகைக்கிறான்
புயல் இப்போது வடகிழக்காக நகர்கிறது
அவனுக்கு கைகள் நடுங்குகின்றன
புயலின் இலக்கை
அதற்கு நினைவூட்டுகின்றான்
அது பயணிக்க வேண்டிய பாதை
அதுவல்லவென்று கண்டிக்கின்றான்
அது பயணிக்க வேண்டிய வேகமும்
அதுவல்லவென்று கூறுகிறான்
பெயர் தெரியாத தீவுக்கூட்டங்களை நோக்கி
புயல் மெல்ல மெல்ல நகர்கிறது
அவனுக்கு வியர்க்கிறது
கவலையோடு
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
மெல்ல மெல்ல புயல்
அவன் பார்வையிலிருந்து மறைகிறது
தலைக்கு மேல் கடக்கும்
மாபெரும் பறவையொன்று
தொடுவானில் மறைந்தார்போல்
இறுதி புள்ளியாய்
திரை ஒளிர்கிறது
அவனுக்கு கண்ணீர் பெருகுகிறது
அழுகையினூடே ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்
அவன் இப்போதுமீண்டும்
கட்டுப்பாடு அறையின் மையத்தில்
தலைகுனிந்தபடி
அமைதியாக காத்திருக்கிறான் தனியாக
நன்றி
என்.விநாயக முருகன்
முந்தைய இரவில்
வானிலை ஆராய்ச்சி மையத்தில்
தனியாக அமர்ந்துள்ளான் அவன்
வெளியே எங்கோ
தொலைதூர அதிர்வேட்டுகளும்
வானவெடிகளின் கொண்டாட்டங்களும்
சன்னமாய் ஒலிக்கின்றன
அவன் அமர்ந்திருக்கும்
கட்டுப்பாட்டு அறையில்
கழுவப்படாத
காலி தேநீர்க்கோப்பைகளும்
எரிந்துப்போன சிகரெட் துண்டுகளும்
மல்லிகைப்பூக்களின் வாசமும்
சிதறி கிடக்கின்றன
அமைதியாக தலையை
கவிழ்ந்திருக்கும் அவன்
சலிப்பாக
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
அவனது இருப்பிடத்திலிருந்து
ஐநூறு கிலோமீட்டர் தள்ளி
புயல் சின்னம் நகர்கிறது
சலிப்புற்றிருந்த அவன் முகம்
இப்போது
காதல் கடிதம் கிடைக்கப் பெற்ற
பதின்ம பெண்ணாய் மாறுகிறது
அந்த அறையில் பரபரப்பு
சூல் கொள்கிறது
அவன்
கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்
கருவிகளின் திசையை மாற்றுகிறான்
கணக்கீடுகளை மீண்டும் சரிபார்க்கிறான்
இதுவரை சந்தித்திராத புதிய புயல்
இதுவென்று அவனுக்கு படுகிறது
வெள்ளைத்தாளில் எதையோ
கிறுக்குகிறான்
தொடர்பு துண்டிக்கப்பட்ட யாருக்கோ
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான்
சில மின்னஞ்சல்களை அனுப்புகிறான்
அவன்
புயலின் மையத்தை
புயலின் உருவத்தை
உன்னிப்பாக உற்றுப் பார்க்கிறான்
சிறுவயதில்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
பால்ய காலத்தோழனின் முகம்
அவனுக்கு நினைவுக்கு வருகிறது
சாட்டிலைட் சமிஞ்கைகளை
கவனமாக ஒலிப்பெயர்க்கிறான்
புயல் வடமேற்கு திசையில் நகர்கிறது
அவனது திசையும் அதுவே
அவன் ஆர்வமாக பார்க்கிறான்
தேநீர் குடித்தபடி
புயலை பார்த்து ரசிக்கின்றான்
நேரம் செல்ல செல்ல
புயலின் வேகம் அதிகரிக்கிறது
அவன்
புயலுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டுகிறான்
புயலின் மையம் சற்று விரிகிறது
அவன் இப்போது
புயலுடன் உரையாட தொடங்குகின்றான்
புயலுக்கும் அவனுக்கும்
இடையிலிருக்கும் பிணைப்பு
அந்தரங்கமானது
புதிரானது
சுவாரசியமானது
அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்ளும்
மொழி மற்றவர்கள் அறியாதது
சங்கேத குறியீடுகளால் நிறைந்தது
அவர்கள் உரையாடல்கள்
காதல் நிறைந்தது
நீண்ட உரையாடலின் முடிவில்
புயலின் மையம் சிறிது சிறிதாக சுருங்குகிறது
அது மெல்ல மெல்ல உருமாறுகிறது
புயலின் திடீர் செய்கை
புரியாமல் அவன் திகைக்கிறான்
புயல் இப்போது வடகிழக்காக நகர்கிறது
அவனுக்கு கைகள் நடுங்குகின்றன
புயலின் இலக்கை
அதற்கு நினைவூட்டுகின்றான்
அது பயணிக்க வேண்டிய பாதை
அதுவல்லவென்று கண்டிக்கின்றான்
அது பயணிக்க வேண்டிய வேகமும்
அதுவல்லவென்று கூறுகிறான்
பெயர் தெரியாத தீவுக்கூட்டங்களை நோக்கி
புயல் மெல்ல மெல்ல நகர்கிறது
அவனுக்கு வியர்க்கிறது
கவலையோடு
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
மெல்ல மெல்ல புயல்
அவன் பார்வையிலிருந்து மறைகிறது
தலைக்கு மேல் கடக்கும்
மாபெரும் பறவையொன்று
தொடுவானில் மறைந்தார்போல்
இறுதி புள்ளியாய்
திரை ஒளிர்கிறது
அவனுக்கு கண்ணீர் பெருகுகிறது
அழுகையினூடே ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்
அவன் இப்போதுமீண்டும்
கட்டுப்பாடு அறையின் மையத்தில்
தலைகுனிந்தபடி
அமைதியாக காத்திருக்கிறான் தனியாக
நன்றி
என்.விநாயக முருகன்
Labels:
Kavithai,
Literature,
Poetry,
Tamil,
Tamil-Poem
Monday, November 14, 2011
குழப்பம்
கரையில் அலைவதில்
எந்த அலையில்
கால நனைப்பதென்று குழப்பம்
இதிலென்ன யோசனை
எந்த அலை
முன்னால் வருகிறதோ
அதில் நனைப்பதுதானே
என்றொரு குரல் கேட்டது
முந்தி வந்த அலையில்
கொஞ்சம் கால்
நனைத்து திரும்புகையில்
அதற்கு பிந்தி வந்த
அலைகளும் கெஞ்ச ஆரம்பித்தன
இப்போது
எந்த அலையில்
கால் நனைத்தோமென்று குழப்பம்
நன்றி
என்.விநாயக முருகன்
எந்த அலையில்
கால நனைப்பதென்று குழப்பம்
இதிலென்ன யோசனை
எந்த அலை
முன்னால் வருகிறதோ
அதில் நனைப்பதுதானே
என்றொரு குரல் கேட்டது
முந்தி வந்த அலையில்
கொஞ்சம் கால்
நனைத்து திரும்புகையில்
அதற்கு பிந்தி வந்த
அலைகளும் கெஞ்ச ஆரம்பித்தன
இப்போது
எந்த அலையில்
கால் நனைத்தோமென்று குழப்பம்
நன்றி
என்.விநாயக முருகன்
Labels:
Kavithai,
Literature,
Poetry,
Tamil,
Tamil-Poem
Thursday, November 10, 2011
இப்படியான வாழ்விலே
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் கோவிலுக்கு போனால்
செருப்பு காணாமல் போய்விடுகிறது
நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது
நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்
நான் நேர்மையாக சம்பாதித்தால்
கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்
நான் வீடு வாங்கினால்
வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்
நான் வாகனம் வாங்கினால்
எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்
நான் ஒட்டு போட்டால்
மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் ஆசிரமத்துக்கு சென்றால்
அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது
நான் ஊழல் செய்தால்
அங்கு சிபிஐ வந்து விடுகிறது
நான் நடிகன் ஆனால்
அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்
நான் உப்பு விற்க போனால்
மழை கொட்டி தீர்க்கிறது
நான் பொரி விற்க போனால்
காற்று வீசி தீர்க்கிறது
நான் நாய் வளர்த்தால்
அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் பிள்ளையார் பிடித்தால்
குரங்காய் மாறிவிடுகிறது
நான் கதை எழுதினால்
கந்தலாக மாறி விடுகிறது
நான் கவிதை எழுதினால்
அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது
நன்றி
என்.விநாயக முருகன்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் கோவிலுக்கு போனால்
செருப்பு காணாமல் போய்விடுகிறது
நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது
நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்
நான் நேர்மையாக சம்பாதித்தால்
கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்
நான் வீடு வாங்கினால்
வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்
நான் வாகனம் வாங்கினால்
எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்
நான் ஒட்டு போட்டால்
மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் ஆசிரமத்துக்கு சென்றால்
அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது
நான் ஊழல் செய்தால்
அங்கு சிபிஐ வந்து விடுகிறது
நான் நடிகன் ஆனால்
அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்
நான் உப்பு விற்க போனால்
மழை கொட்டி தீர்க்கிறது
நான் பொரி விற்க போனால்
காற்று வீசி தீர்க்கிறது
நான் நாய் வளர்த்தால்
அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் பிள்ளையார் பிடித்தால்
குரங்காய் மாறிவிடுகிறது
நான் கதை எழுதினால்
கந்தலாக மாறி விடுகிறது
நான் கவிதை எழுதினால்
அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது
நன்றி
என்.விநாயக முருகன்
Labels:
Kavithai,
Literature,
Poetry,
Tamil,
Tamil-Poem
Wednesday, October 19, 2011
வழித்துணை
பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன்
அவன் ஊர் வந்ததும்
எழுப்பச் சொல்லி உறங்கப்போகிறான்
அப்படியென்ன இருக்கலாம்
அந்த ஊரில்?
நதியா,மலையா,கோவிலா
மண்ணா,மரமா,கல்லா
மாமன் மகளா
பொங்குமாக்கடலா
பகையா,உறவா,கடனா
பகலா,இரவா,மழையா
பூவா,காயா
உறங்குபவனைத் தட்டியெழுப்ப மனமின்றி
அவன் ஊரை சுமந்து
பயணிக்கின்றேன் மிக பத்திரமாய்
ஊர் வந்ததும்
அவசரம் அவசரமாய் இறங்கி செல்பவன்
மறக்காமல்
என்னிடம் ஒப்படைத்த
அவன் ஊரை வாங்கிக்கொண்டுப் போகிறான்
திரும்பிப் பார்க்காமலேயே
நன்றி
என்.விநாயக முருகன்
அவன் ஊர் வந்ததும்
எழுப்பச் சொல்லி உறங்கப்போகிறான்
அப்படியென்ன இருக்கலாம்
அந்த ஊரில்?
நதியா,மலையா,கோவிலா
மண்ணா,மரமா,கல்லா
மாமன் மகளா
பொங்குமாக்கடலா
பகையா,உறவா,கடனா
பகலா,இரவா,மழையா
பூவா,காயா
உறங்குபவனைத் தட்டியெழுப்ப மனமின்றி
அவன் ஊரை சுமந்து
பயணிக்கின்றேன் மிக பத்திரமாய்
ஊர் வந்ததும்
அவசரம் அவசரமாய் இறங்கி செல்பவன்
மறக்காமல்
என்னிடம் ஒப்படைத்த
அவன் ஊரை வாங்கிக்கொண்டுப் போகிறான்
திரும்பிப் பார்க்காமலேயே
நன்றி
என்.விநாயக முருகன்
Labels:
Kavithai,
Literature,
Poetry,
Tamil,
Tamil-Poem
Thursday, September 8, 2011
குஞ்சுண்ணியும்,காந்தியும்
குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே
எழுதி எழுதியே
எழுத்தாய் போனவர்
குஞ்சுண்ணி
எதைப் பற்றியும் எழுதுவார்
எல்லார் பற்றியும் பேசுவார்
எல்லாமும் விவாதிப்பார்
குஞ்சுண்ணி
ஒருநாள் தேநீர் கடைக்கு சென்றார்
தேநீர் அருந்தியபடியே
தினத்தந்தி பேப்பரை
மெதுவாக படித்தார்
என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?
குஞ்சுண்ணிக்கு அதிர்ச்சி
கோபத்தில் பேப்பரை கசக்கி எறிந்தார்
அடக்கடவுளே வடைபோச்சே..
வீட்டுக்கு வந்ததும்
காந்தியை பற்றி தேட ஆரம்பித்தார்
காந்தி பிறந்த இடத்துக்கு சென்றார்
சபர்மதி ஆசிரம் சென்று
காந்தி சிலையை வணங்கினார்
ஹேராம் படத்தை
டிவிடியில் பார்த்தார்
காந்திக்கு குல்லா தைத்து கொடுத்த
சுலைமான் சேட்டிடம் பேட்டி எடுத்தார்
மூச்சுக்கு நூறுமுறை
காந்தி காந்தி என்றர்
மனைவி சாந்தியை கூட
காந்தி என்று விளித்தார்
பூந்தி தட்டை பார்த்தாலும்
காந்தி காந்தியென்று உருகினார்
ஊண் உருகி
உள்ளொளி பெருகி
காந்தியாகவே மாறினார்
காந்தியை பற்றி
கவிதை எழுத ஆரம்பித்தார்
காந்தியை பற்றி
கட்டுரைகள் எழுதி குவி்த்தார்
காந்தி கிராமத்திற்கு
கால்நடையாகவே சென்றார்
காந்திக்கே தெரியாத
பல விஷயங்களை
கண்டுபிடித்து எழுதினார்
காந்தி குளித்தது
காந்தி பல்விளக்கியது
காந்தி கிரிக்கெட் விளையாடியது
இன்னும் பல பல
குஞ்சுண்ணி
ஒரு சுபயோக சுபதினத்தன்று
தனது எழுத்துகளையெல்லாம்
திரட்டி நூலாக வெளியிட்டார்
ஆயிரம் பிரதிகளில்
காந்தி சிரித்தாலும்
ஆத்ம திருப்தி வரவில்லை
குஞ்சுண்ணிக்கு
ஒரு யோசனை பிறந்தது
ஒரு காந்தி எடுத்தால்
இன்னொரு காந்தி இலவசமென்று
ஆரம்பித்தார்
ஒரு புத்தகம் ஐநூறு ரூபாய்
என்று விற்க ஆரம்பித்தார்
ஐந்து நூறுரூபாய்
பத்து ஐம்பதுரூபாய்
ஐநூறு பத்துரூபாய்
குஞ்சுண்ணிக்கு வீடெங்கும்
காந்தி கொள்கைகள்
பத்தாய் நூறாய்
ஐநூறாய் ஆயிரமாய்
குஞ்சுண்ணி
காந்தியை போன்று சிரிக்கிறார்ர்
காந்தியை போன்று உண்கிறார்
காந்தியை போன்று நடக்கிறார்
காந்தியாகவே வாழ்கிறார்
குஞ்சுண்ணி
இப்போது ஒரு முழு காந்தியவாதி....
உங்களுக்குத் தெரியும்தானே
எழுதி எழுதியே
எழுத்தாய் போனவர்
குஞ்சுண்ணி
எதைப் பற்றியும் எழுதுவார்
எல்லார் பற்றியும் பேசுவார்
எல்லாமும் விவாதிப்பார்
குஞ்சுண்ணி
ஒருநாள் தேநீர் கடைக்கு சென்றார்
தேநீர் அருந்தியபடியே
தினத்தந்தி பேப்பரை
மெதுவாக படித்தார்
என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?
குஞ்சுண்ணிக்கு அதிர்ச்சி
கோபத்தில் பேப்பரை கசக்கி எறிந்தார்
அடக்கடவுளே வடைபோச்சே..
வீட்டுக்கு வந்ததும்
காந்தியை பற்றி தேட ஆரம்பித்தார்
காந்தி பிறந்த இடத்துக்கு சென்றார்
சபர்மதி ஆசிரம் சென்று
காந்தி சிலையை வணங்கினார்
ஹேராம் படத்தை
டிவிடியில் பார்த்தார்
காந்திக்கு குல்லா தைத்து கொடுத்த
சுலைமான் சேட்டிடம் பேட்டி எடுத்தார்
மூச்சுக்கு நூறுமுறை
காந்தி காந்தி என்றர்
மனைவி சாந்தியை கூட
காந்தி என்று விளித்தார்
பூந்தி தட்டை பார்த்தாலும்
காந்தி காந்தியென்று உருகினார்
ஊண் உருகி
உள்ளொளி பெருகி
காந்தியாகவே மாறினார்
காந்தியை பற்றி
கவிதை எழுத ஆரம்பித்தார்
காந்தியை பற்றி
கட்டுரைகள் எழுதி குவி்த்தார்
காந்தி கிராமத்திற்கு
கால்நடையாகவே சென்றார்
காந்திக்கே தெரியாத
பல விஷயங்களை
கண்டுபிடித்து எழுதினார்
காந்தி குளித்தது
காந்தி பல்விளக்கியது
காந்தி கிரிக்கெட் விளையாடியது
இன்னும் பல பல
குஞ்சுண்ணி
ஒரு சுபயோக சுபதினத்தன்று
தனது எழுத்துகளையெல்லாம்
திரட்டி நூலாக வெளியிட்டார்
ஆயிரம் பிரதிகளில்
காந்தி சிரித்தாலும்
ஆத்ம திருப்தி வரவில்லை
குஞ்சுண்ணிக்கு
ஒரு யோசனை பிறந்தது
ஒரு காந்தி எடுத்தால்
இன்னொரு காந்தி இலவசமென்று
ஆரம்பித்தார்
ஒரு புத்தகம் ஐநூறு ரூபாய்
என்று விற்க ஆரம்பித்தார்
ஐந்து நூறுரூபாய்
பத்து ஐம்பதுரூபாய்
ஐநூறு பத்துரூபாய்
குஞ்சுண்ணிக்கு வீடெங்கும்
காந்தி கொள்கைகள்
பத்தாய் நூறாய்
ஐநூறாய் ஆயிரமாய்
குஞ்சுண்ணி
காந்தியை போன்று சிரிக்கிறார்ர்
காந்தியை போன்று உண்கிறார்
காந்தியை போன்று நடக்கிறார்
காந்தியாகவே வாழ்கிறார்
குஞ்சுண்ணி
இப்போது ஒரு முழு காந்தியவாதி....
Friday, July 1, 2011
இரண்டு கவிதைகள்
இயல்பு
-------
கேசவப் பெருமாள் கோவிலில்
ராமகாதை சொல்லிக் கொண்டிருந்தார்
பத்து அவதாரமெடுத்தவர் கதையை
பட்டாச்சாரியார் பாடிக்கொண்டிருந்தார்
கேட்க கேட்க கண்ணீர் மல்கியது
கதையின் கிளைமாக்சில்
ராமன் தனது பாதுகைகளை
பரதனிடம் ஒப்படைக்க
கோவில் வாசலில் கழற்றிப்போட்ட
புதுச்செருப்பு மீது
பார்வை சென்றது
புகழ்
----
மார்க்கெட் போன
நடிகர் ஒருவரை
துணிக்கடை திறப்பு விழாவில்
சந்திக்க நேரிட்டது
சிரித்தபடி கைகுலுக்கியவரிடம்
ஆட்டோகிராப் நோட்டை தந்தேன்
விழுந்தால் விதையாவேன்
எழுந்தால் மரமாவேன்
அன்புடன்………என்று முடிந்திருந்தது
அழகான கையெழுத்து
பாவம்
எங்கு விழுந்து எழுந்தாரோ
.
-------
கேசவப் பெருமாள் கோவிலில்
ராமகாதை சொல்லிக் கொண்டிருந்தார்
பத்து அவதாரமெடுத்தவர் கதையை
பட்டாச்சாரியார் பாடிக்கொண்டிருந்தார்
கேட்க கேட்க கண்ணீர் மல்கியது
கதையின் கிளைமாக்சில்
ராமன் தனது பாதுகைகளை
பரதனிடம் ஒப்படைக்க
கோவில் வாசலில் கழற்றிப்போட்ட
புதுச்செருப்பு மீது
பார்வை சென்றது
புகழ்
----
மார்க்கெட் போன
நடிகர் ஒருவரை
துணிக்கடை திறப்பு விழாவில்
சந்திக்க நேரிட்டது
சிரித்தபடி கைகுலுக்கியவரிடம்
ஆட்டோகிராப் நோட்டை தந்தேன்
விழுந்தால் விதையாவேன்
எழுந்தால் மரமாவேன்
அன்புடன்………என்று முடிந்திருந்தது
அழகான கையெழுத்து
பாவம்
எங்கு விழுந்து எழுந்தாரோ
.
Wednesday, June 29, 2011
ஆரண்யகாண்டம்-ஒரு கலந்துரையாடல்
ஆரண்ய காண்டம் தமிழின் மிக புதுமையான முயற்சி. இந்தப்படம் பற்றி இன்னும் விரிவான விவாதங்களும்,பரவலான கவன ஈர்ப்பும் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தப்பட வேண்டும். இதன் தொடக்கமாக நானும், நண்பர் விஜயமகேந்திரனும் இணைந்து ஆரண்யகாண்டம் திரைப்படம் பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலந்துக் கொள்கிறார். கருத்துரை வழங்குபவர்கள் அரவிந்தன் (காலச்சுவடு), கவிதா முரளிதரன் மற்றும் வெளிரங்கராஜன்.
இடம்:- டிஸ்கவரி புக் பேலஸ் (பாண்டிச்சேரி ஹெஸ்ட் ஹவுஸ்அருகில்)
மேற்கு கே.கே.நகர்,சென்னை-78
நாள்:- ஜூலை 2 , சனிக்கிழமை
நேரம்:- மாலை 6 மணி
நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்ப இயலவில்லை. இந்த அறிவிப்பை அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றேன்.
நன்றி !!!
தொடர்புகளுக்கு:-
விநாயக முருகன் 9841790218
விஜயமகேந்திரன் 9444658131
வேடியப்பன் 9940446650
.
Labels:
Cinema,
Movie,
Notice,
Tamil,
Tamil-Article,
WorldCinema
Subscribe to:
Posts (Atom)