எப்போதாவது
சாலையோரம்
கையிலிருக்கும் காந்தக்குச்சியால்
தரையை துடைத்துக்கொண்டேச் செல்லும்
இரும்பு பொறுக்கியை சந்தித்ததுண்டா
ஓர் எறும்புத்தின்னியின்
பசியுடன் நடக்கும்
அவனைக் கண்டு
பூட்டிலிருந்து சாவிக்கள் உதிர்கிறன
அவனைக் கண்டு
சிறுசிறு ஆணிக்கள் பின்தொடர்கிறன
வீடுகளின் மேற்கூரையிலிருந்து
இரும்புச்சட்டங்கள் விடுபடுகிறன
கொடிக்கம்பங்கள் சாய்ந்து வளைகிறன
இரும்புக்கதவுகளை இறுக தாழிட்டுக் கொள்கிறார்கள்
இருசக்கர வாகனங்களை இறுகப் பிடித்து கொள்கிறார்கள்
இரும்பு பணப்பெட்டிகளை பூட்டி வைக்கிறார்கள்
தொடர் வண்டிகள் மெதுவாக செல்கிறன
தண்டவாளங்கள் நெளிகிறன
அவனைக் கண்டு மனிதர்கள் பயப்படுகிறார்கள்
அவனைக் கண்டு நாய்கள் குரைக்கிறன
அவனைக் கண்டு பறவைகள் பதறி பறக்கிறன
அவனைக் கண்டு கடவுளுக்கு பயம் வருகிறது
ஓர் எறும்புத்தின்னியின்
பசியுடன் நடக்கும்
அவனைக் கண்டு
ஒருக்கணம் உலகம் பதறி
மீண்டும் சுழல ஆரம்பிக்கிறது
வித்தியாசமான சிந்தனை வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்!
ReplyDelete