Friday, January 10, 2014

மீன்காரி

முன்பொரு முறை
பூ விற்ற பெண்மனி
பின்னாட்களில்
மீன் விற்க ஆரம்பிக்கும்போது
அவள் முன்னிருக்கும் மீன்குவியல் மீது
தண்ணீர் தெளிக்கின்றாள்
ஏதோ நினைப்பில்
சலனமற்று வெறித்திருக்கும்
கண்களை பார்த்துவிட்டு
மீண்டும் தெளிக்கின்றாள்




நன்றி
விநாயக முருகன்

2 comments:

  1. மிக அருமை
    பறிக்கப்பட்ட பூக்கள் சிரிப்பவையாகவும்
    இறந்து விட்ட மீன்கள் துக்கப்படுபவைகளாகவும் தெரிவது மனமாயை

    ReplyDelete